மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆச்சரிய தகவல் – 2 மிகப்பெரிய அறிவிப்புகள்!
மத்திய அரசின் ஊழியர்கள் எதிர்பார்க்காத வகையிலான இரண்டு மிகப்பெரிய அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளது.
ஜாக்பாட் அறிவிப்புகள்:
மத்திய அரசின் ஊழியர்களுக்கு தற்போது 46 சதவீத அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. மேலும், 2024 ஜனவரி முதல் ஜூன் மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வு விரைவில் வெளியாக உள்ளது. கடந்த மாதங்களுக்கான ஏ ஐ சி பி ஐ குறியீட்டு தகவல்களின்படி நடப்பு தாவணைக்கு நான்கு சதவீத அகவிலைப்படி உயர்வு கிடைக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மத்திய அரசு ஊழியர்கள் மொத்தம் 50 சதவீத அகவிலைபடியை பெறுவார்கள்.
இதன் பிறகு அரசு ஊழியர்களுக்கான வீட்டு வாடகை கொடுப்பனவும் உயர்த்தப்பட உள்ளது. வீட்டு வாடகை கொடுப்பனவு ஊழியர்கள் வசிக்கும் நகரத்திற்கு ஏற்ப X ,Y மற்றும் Z என்று 3 அடுக்குகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இவை இரண்டும் உயர்த்தப்படும் உச்சத்தில் அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளமும் அதிகரிக்கும். இதற்கான அதிகாரப்பூர்வ தகவல்கள் ஹோலி பண்டிகைக்கு முன்னதாக வெளியிடப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
தமிழகத்தில் நாளை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் – பணி தீவிரம்!!