தமிழக அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் – மத்திய அரசு உத்தரவு!!
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் அடிப்படை வசதிகள் குறித்த விவரங்கள் திரட்ட மத்திய அரசு, மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் திட்டங்கள்:
மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாணவர்கள் தங்கள் பள்ளிக் கல்வியை எந்த காரணத்திற்காகவும் இடையில் நிறுத்தி விடக்கூடாது என்பதே மத்திய அரசின் குறிக்கோளாக கொண்டுள்ளது.
எம்.பிஏ., எம்சிஏ., எம்எஸ்சி., தொலைதூர பட்டப்படிப்பு விண்ணப்பம் – அண்ணா பல்கலை வரவேற்பு!!
அடிப்படை வசதிகள்:
மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் பட்ஜெட்டில் மாநில அரசுகளுக்கு பள்ளி கல்விக்கு என்று தனியாக நிதி ஒதுக்குகிறது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு தற்போது மாநில அரசிடம் அறிவிப்பு விடுத்துள்ளது. இதற்காக மாவட்ட வாரியாக உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளின் விவரங்களை திரட்ட உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகளின் விவரங்கள்:
கோவை மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளின் குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகளை குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் கீழ் செயல்படும் PMS/PRABANDH PORTAL என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் பள்ளிகள் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதன் அடிப்படையில் மேம்பாட்டு நிதி ஒதுக்கப்படும். தலைமை ஆசிரியர்கள் வாயிலாக பதிவேற்றம் செய்யப்பட உள்ள இந்த தகவல்கள் பற்றிய உண்மையை அறிய வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்