ஓய்வூதியம் பெறுவோர் கவனத்திற்கு – பிப்ரவரி 20 ஆம் தேதிக்குள் இதை முடிக்க வேண்டும்!!
இந்தியாவில் பாதுகாப்பு ஓய்வூதியம் பெறும் நபர்கள் ஆண்டு அடையாளத்தை பிப்ரவரி 20 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
பாதுகாப்பு ஓய்வூதியம்
வழக்கமாக, ஓய்வூதியம் பெறும் ஒவ்வொருவரும் ஆண்டு தோறும் தங்களது வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிப்பது கட்டாயம் ஆகும். அந்த வகையில், பாதுகாப்பு துறையில் இருந்து ஓய்வு பெற்று ஓய்வூதியம் பெறுபவர்கள் வருடாந்திர அடையாளத்தை ஆண்டு தோறும் சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி, ஓய்வூதிய நிர்வாகத்திற்கான அமைப்பு அல்லது ஸ்பார்ஷ் மூலம் ஓய்வூதியம் பெறும் அனைத்து பாதுகாப்பு ஓய்வூதியதாரர்களும் பிப்ரவரி 20 ஆம் தேதிக்குள் வருடாந்திர அடையாளத்தை முடிக்க வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பணிநீக்க பட்டியலில் இணைந்த பிரபல நிறுவனம் – 1000 ஊழியர்கள் குறைப்பு!!
Follow our Instagram for more Latest Updates
இந்த வருடாந்திர அடையாள சான்றிதழை சமர்ப்பித்தால் மட்டுமே ஓய்வூதியதாரர்கள் மாதாந்திர ஓய்வூதியத்தின் தொடர்ச்சியான பணத்தை பெறுவதற்கு அனுமதிக்கப்படும். அதனால், வரும் 20 ஆம் தேதிக்குள் பயனர்கள் வருடாந்திர அடையாளத்தை முடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இப்போது, தங்கள் வருடாந்திர அடையாள சேவையை முடித்த ஓய்வூதியதாரர்கள் ஸ்பார்ஷ் போர்ட்டலில் கணக்கு நிலையை சரிபார்க்கலாம்.