
நாடு முழுவதும் அரசின் “ஷ்கார் டாக்ஸி சேவை” விரைவில் தொடங்கப்படும்…!! மத்திய உள்துறை அமைச்சர் அமித்சா அதிரடி அறிவிப்பு
பிரபலமான தனியார் நிறுவன டாக்ஸி தளங்களான ஓலா, உபர், ராபிடோ மற்றும் ப்ளூஸ்மார்ட் ஆகியவை மக்களிடையே அதிக வரவேற்பை பெற்று, இந்திய சந்தைகளில் அதிக பங்குகளை பெற முயற்சித்து வருகின்றன. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்சா கடந்த புதன்கிழமை அன்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில், ‘நாடு முழுவதும் செயல்படும் “ஷ்கார்” என்ற கூட்டுறவு சேவையை விரைவில் தொடங்க உள்ளதாக’ அறிவித்துள்ளார்.
மேலும், இது மற்ற தனியார் நிறுவன டாக்ஸி சேவைகளை போல் இல்லாமல், வித்தியாசமாக செயல்படும் என்றும், இதில் கிடைக்கக்கூடிய லாபம் முழுவதும் ஓட்டுநர்களையே சேரும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இதுபோன்று மேற்குவங்கத்தில் “யாத்ரி சதி” மற்றும் கர்நாடகாவில் “நம்ம யாத்ரி” போன்றவை அம்மாநில தனியார் நிறுவனங்களின் மூலம் டாக்ஸி சேவைகளை வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, இந்த ஷ்கார் டாக்ஸி சேவையானது நாடு முழுவதும் 24 மணி நேரமும், மலிவான கட்டணங்களுடன் இனி வரும் மாதங்களில் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

























