
அடிக்கடி Wi-Fi உபயோகிப்பவரா நீங்கள்..?? அப்போ இந்த தவறை மட்டும் செய்யாதீங்க.. மத்திய அரசு விடுத்த எச்சரிக்கை..!!
தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் மக்கள் தங்களது தினசரி பரிவர்த்தனைகளை ஆன்லைன் மூலம் நிவர்த்தி செய்கின்றனர். அதாவது தேநீர் விடுதி முதல் ஷாப்பிங் மால் வரை அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவது இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. மேலும், சிலர் தங்களது பரிவர்த்தனைகளை பொது வைஃபை (public Wi-Fi) பயன்படுத்தி மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில் ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகள் குறித்து முக்கிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
தமிழக பொதுமக்கள் கவனத்திற்கு.. நாளை (29-04-2025) பவர்கட் செய்யப்படும் பகுதிகளின் லிஸ்ட் இதோ..!!
அதாவது, “ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகள் மற்றும் பிற முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள பொது வைஃபை நெட்வொர்க்குகளை பயன்படுத்த வேண்டாம் என மத்திய அரசின் இந்திய கணினி அவசர நிலை பதிலளிப்பு குழு எச்சரிக்கை விடுத்துள்ளது”. ஏனெனில் “பொது இடங்களில் உள்ள இலவச வைஃபை மூலம் சைபர் கிரிமினல்கள் உங்களது தனிப்பட்ட மற்றும் நிதி தகவல்களை ஹேக் செய்து மோசடியில் ஈடுபட வாய்ப்புள்ளதால் பயனாளர்கள் நிதி இழப்பு மோசடிக்கு ஆளாக நேரிடும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.























