PPF வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி.. இனி ஈஸியா நாமினி விவரங்களைப் அப்டேட் செய்யலாம்..!!
பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்பது அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு சேமிப்புத் திட்டமாகும். இத்திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் வரி இல்லாத பாதுகாப்பான வருமானம் கிடைக்கும். மேலும், இதில் செய்யப்பட்ட முதலீட்டிற்கு வருமான வரிச் சட்டம் 1961, பிரிவு 80C இன் கீழ் வரி விலக்கு அளிக்கப்படும். மேலும், நீண்ட காலத்திற்கு குறைந்த முதலீட்டில் பெரிய நிதியை உருவாக்க இந்தத் திட்டம் சிறந்த வழியாகும். இந்நிலையில் PPF திட்டம் குறித்த முக்கிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது, “வங்கி திருத்த மசோதா 2025 ன் கீழ், PPF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு நாமினி விவரங்களைப் அப்டேட் செய்வது அல்லது மாற்றுவதற்கான கட்டணங்களை மத்திய அரசு நீக்கியுள்ளது. மேலும், சேஃப்டி கஸ்டடி அல்லது லாக்கரில் வைக்கப்பட்டுள்ள பொருட்களுக்கு நாமினியை சேர்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது X பக்கத்தில் தெரிவித்துள்ளார்”. இதை “ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என 2 முறையிலும் அப்டேட் செய்யலாம். ஆன்லைன் முறையில் அப்டேட் செய்ய உங்கள் வங்கியின் இன்டர்நெட் பேங்கிங் போர்ட்டலில் லாகின் செய்து முன்னதாக அளிக்கப்பட்ட உங்கள் நாமினியின் தகவல்களை மாற்றியமைத்துக் கொள்ளலாம். இதுவே ஆஃப்லைன் முறையில் அப்டேட் செய்ய உங்கள் வங்கி அல்லது தபால் அலுவலகத்திலிருந்து Form F ஐ பெற்றுக் கொண்டு புதிய நாமினியின் முழு விவரங்களையும் நிரப்பி அடையாளச் சான்று நகலை இணைத்து சமர்ப்பிப்பதன் மூலம் உங்கள் நாமினியை சேர்த்து கொள்ளலாம்”.
Join the ExamsDaily Whatsapp Group


























