அரசு ஊழியர்கள் அனைவரும் அலுவலகம் வர வேண்டும் – மத்திய பணியாளர் அமைச்சகம் உத்தரவு!!
மத்திய பணியாளர் அமைச்சகம் பிறப்பித்து உள்ள உத்தரவில், அனைத்து மத்திய அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களும் வேலை நாட்களில் அலுவலகம் வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசு உத்தரவு:
கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அரசு அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டன. பின்னர் பணிகளில் ஏற்பட்ட தொய்வு காரணமாக 33% பணியாளர்களுடன் அலுவலகங்கள் இயங்கும் வகையில் ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டது. அதற்கடுத்து மே மாதம் முதல் துணைச் செயலாளர்கள் பதவிக்கு கீழ் உள்ள ஊழியர்கள் 50 சதவீதம் பேர் பணிக்கு வர அறிவுறுத்தப்பட்டனர். பிற பணியாளர்கள் வீட்டில் இருந்த படியே பணிபுரியலாம் என தெரிவிக்கப்பட்டது.
தற்போது கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ளது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து அனைத்து மத்திய அரசு பணியாளர்களும் அலுவலகம் வந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளது.
TN Job “FB Group” Join Now
அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, அனைத்து மத்திய அரசுத்துறை பணியாளர்களும் வேலை நாட்களில் அலுவலகம் வர வேண்டும். மேலும் நோய் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள ஊழியர்கள் அலுவலகம் வரத் தேவையில்லை. இது தொடர்பாக மறுஉத்தரவு வரும் வரை அவர்களுக்கு வீட்டில் இருந்தே வேலை செய்யும் நடைமுறை தொடரும். மேலும் பயோமெட்ரிக் வருகைப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதும் அடுத்த அறிவிப்பு வரும் வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்