தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் வெளியீடு – பள்ளிக்கல்வித்துறைக்கு கோரிக்கை!!
தமிழகத்தில் சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின் படி பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள் வெளியிடுமாறு பள்ளிக்கல்வித்துறைக்கு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பொதுத்தேர்வு மாதிரி வினாக்கள்:
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் சமரச்சீர் கல்வி பாடத்திட்டத்தின் படி பொதுத்தேர்வு எழுத உள்ள 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரசின் தேர்வுத்துறை மூலமாக தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அந்த மாணவர்களுக்கான பாடத்திட்டங்களை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தயார் செய்கிறது. ஆனால் பொதுத்தேர்வு வினாத்தாள்களை தேர்வுத்துறை தயார் செய்கிறது.
TN Job “FB Group” Join Now
இதன் காரணமாக பொதுத்தேர்வு பாடத்திட்டங்களும், வினாக்களும் வேறு மாதிரி உள்ளன. இந்த இரண்டு துறைகளின் இடையே ஒருங்கிணைப்பு இல்லாத காரணத்தால் பாடத்திட்டங்களிலும், வினாத்தாள்களிலும் முரண்பாடுகள் ஏற்படுகின்றன. மேலும் கொரோனா காரணமாக பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதால் வினாத்தாள்கள் எப்படி இருக்கும் என மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.
கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு – ரூ.785 ஆக நிர்ணயம்!!
எடுத்துக்காட்டாக 10 ஆம் வகுப்பு ஆங்கிலம் பாடத்திட்டத்தில் உள்ள இரண்டாம் தாளில் கேட்கப்படும் பகுதிகளான Note Making, Letter Writing, Picture Comprehensive போன்றவை நீக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகள் மாணவர்கள் எளிதல் மதிப்பெண் பெற கூடிய பகுதிகள் ஆகும். அந்த பகுதிகள் தற்போது உண்டா என குழப்பம் உள்ளது.
சிவகங்கை கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வு பணி – இன்று முதல் தொடக்கம்!!
எனவே பள்ளிக்கல்வித்துறை பொதுத்தேர்வு மாதிரி வினாக்கள், தேர்வுக்கான வினாத்தாள் எந்தெந்த பாடத்திட்டங்களில் கேட்கப்படும், அதில் இடம்பெறும் பாடங்கள் குறித்தும் அனைத்து பள்ளிகளுக்கும் தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்