
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா மூலம் இலவச வீடுகள் கட்டும் திட்டம்…!! மத்திய அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்…!!
தமிழ்நாடு மற்றும் மத்திய அரசு சார்பில் வீட்டு வசதி இல்லாத ஏழை மக்களுக்கு இலவச வீடுகள் கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், தற்போது மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY -U 2.0)’ திட்டத்தின் கீழ் கடந்த மார்ச் 3, 2025 வரை, நகரங்களில் உள்ள குடிசைவாசிகளுக்கு 90.60 லட்சம் வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு இணையமைச்சர் டோகன் சாஹு தகவல் வெளியிட்டுள்ளார்.
மேலும், கடந்த மார்ச் 3, 2025 நிலவரப்படி இத்திட்டத்தில் சுமார் 112.46 லட்சம் வீடுகள் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதன்படி, அனுமதிக்கப்பட்ட வீடுகளை கட்டி முடிக்க வருகின்ற டிசம்பர் 31, 2025 வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியிட்டுள்ளார். மேலும், இந்த திட்டங்களை முடிப்பதற்கான கால அவகாசம் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபாடும் என்றும், இத்திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கையின்படி 12 -36 மாதங்கள் ஆகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
























