பெண் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 4500 வழங்கும் மத்திய அரசின் திட்டம் – உண்மை தன்மை குறித்து வெளியான அறிவிப்பு!
மத்திய அரசு சார்பில் பெண் குழந்தைகளுக்கு மாதம் ரூ.4500 வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வரும் நிலையில் அது குறித்த விளக்கம் வெளியாகி இருக்கிறது
உதவித்தொகை திட்டம்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, ‘கன்யா சுமங்கலா யோஜனா’ திட்டத்தின் கீழ், குடும்பத்தில் பெண் குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு, மாதம் ரூ.4,500 ரொக்க ஊக்கத்தொகையாக வழங்க இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் அரசாங்கத்தின் உண்மைச் சரிபார்ப்பு நிறுவனமான PIB Fact Check தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து விளக்கம் கொடுத்துள்ளது.
NTRO-வில் Consultant காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க தவறாதீர்கள் || முழு விவரங்களுடன்!
அதாவது சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தி குறித்து அரசாங்கத்தின் உண்மைச் சரிபார்ப்பு நிறுவனமான PIB Fact Check தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளது. அதாவது PIB Fact Check தனது ட்விட்டர் பக்கத்தில் அத்தகைய திட்டம் எதுவும் மத்திய அரசால் நடத்தப்படவில்லை என தெரிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download