மத்திய அரசு நிறுவனங்களில் காலிப்பணியிடங்கள் – கல்வி அமைச்சர் வெளியீடு!!
மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவுகளில் பெரும்பான்மையான பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கல்வி நிறுவனங்கள் காலி இடங்கள்:
42 மத்திய பல்கலைக்கழகங்களில் எஸ்.சி, எஸ்.டி மற்றும் மற்ற பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக மத்திய கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். மத்திய அரசு பணியிடங்கள் இடஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்படுவது குறித்து காங்கிரஸ் கட்சியினர் கேட்ட கேள்வி மத்திய கல்வி அமைச்சர் பதில் அளித்துள்ளார். அதில் ஓ.பி.சி, எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு முறையில் பெரும்பாலான பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக தகவல் வெளியானது.
TN Job “FB Group” Join Now
நிரப்பப்படாத பிரிவினரும், பணியிடங்களும்:
SC பிரிவினர் : 39 சதவிகித பணியிடங்கள்
ST பிரிவினர் : 42 சதவிகித பணியிடங்கள்
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் : 52 சதவிகித பணியிடங்கள் காலியாக உள்ளது.
பார்சல் மேலாண்மை திட்டம் நவீனமயமாக்கல் – தெற்கு ரயில்வே நடவடிக்கை!!
இந்திரா காந்தி பல்கலைக்கழகத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கான 41 சதவிகித பணியிடங்களும், பழங்குடியின பிரிவினருக்கான 49 சதவிகித பணியிடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கான 67 சதவிகித பணியிடங்களும் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்விக் கடனில் தமிழகம், கேரளா முன்னிலை – மத்திய அமைச்சர் விளக்கம்
இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் (ஐ.ஐ.எம்) தாழ்த்தப்பட்டோருக்கு 60 சதவீத பணியிடங்களும், பழங்குடியினருக்கு சுமார் 80 சதவிகித பணியிடங்களும், நிரப்பப்படாமல் உள்ளது. எஸ்.டி. பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட 24 இடங்களில் 5 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளதாக அவர் வெளியிட்ட அறிவிப்பு மூலமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.