பார்சல் மேலாண்மை திட்டம் நவீனமயமாக்கல் – தெற்கு ரயில்வே நடவடிக்கை!!
தெற்கு ரயில்வே அறிவிப்பின் படி, பார்சல் மேலாண்மை திட்டத்திற்காக 666 ரயில் நிலையங்கள் கணினிமயமாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பார்சல் மேலாண்மை திட்டம்:
தெற்கு ரயில்வே சார்பில் பயணிகள் ரயில்களில் சரக்குகளை அனுப்ப கூடுதலாக ரயில் பெட்டிகள் இணைக்கப்படும். இந்த சேவைகள் மூலமாக முக்கிய நகரங்கள் மற்றும் நடுத்தர நகரங்களில் உள்ள சிறு குறு தொழிலாளர்களின் பொருள்களை குறைந்த செலவில் அனுப்ப உதவியாக இருக்கும். மேலும் மக்கள் தங்களது இருசக்கர வாகனங்கள், வீடு காலி செய்த பொருள்கள் போன்றவற்றையும் அனுப்பலாம்.
தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து – காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு!!
இந்நிலையில் தெற்கு ரயில்வே இந்த திட்டத்தை மேம்படுத்தும் நோக்கில் ரயில்வே பார்சல் சேவையை ‘பார்சல் மேலாண்மை திட்டம்’ என்ற பெயரில் நவீனமயமாக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதுவரை முதல் கட்டமாக 84 ரயில் நிலையங்களில் இந்த திட்டம் கணினிமயமாக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது கட்டமாக 143 ரயில் நிலையங்களிலும், மூன்றாவது கட்டமாக 523 ரயில் நிலையங்களிலும் கணினிமயமாக்கப்பட உள்ளது. கணினி மயமாக்கப்பட்ட பின்னர் www.parcel.indianrail.gov.in என்ற இணையதளம் உருவாக்கப்படும். அதில் பார்சல்கள் அனுப்ப 120 நாட்களுக்கு முன்பு இதில் முன்பதிவு செய்து கொள்ளலாம். பதிவு பெற்ற வாடிக்கையாளர்கள் இணையதளம் மூலமாக பார்சல் பதிவு செய்ய விண்ணப்பம் அனுப்ப முடியும்.
பள்ளி மாணவிகளின் பெற்றோருக்கும் கொரோனா – தஞ்சாவூரில் பதற்றம் !
மேலும் கணினி மயமாக்கப்பட்ட பார்சல் சேவை மூலமாக பார்சல்கள் பதிவு செய்யும் போது அந்த பொருள்களின் எடை, மின்னணு எடை இயந்திரம் வாயிலாக கணினியில் பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பார்சல் பதிவு செய்யப்பட்ட விவரம் மற்றும் பார்சல் குறிப்பிட்ட ரயில் நிலையத்துக்கு சென்ற விவரம் போன்றவை பார்சல் அனுப்பியவருக்கு குறுந்செய்தியாக அனுப்பப்படும்.