பள்ளி மாணவிகளின் பெற்றோருக்கும் கொரோனா – தஞ்சாவூரில் பதற்றம் !
மாணவிக்கு கொரோனா:
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டது. அரசு சுகாதார அதிகாரிகள் தொடர்ந்து பள்ளிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணித்து வருகின்றனர். மாணவ, மாணவிகளும் தகுந்த சமூக இடைவெளியை பின்பற்ற மற்றும் முக கவசம் அனைத்து வர கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அரசு உதவி பெறும் பள்ளி மாணவி ஒருவருக்கு கடந்த 8ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
12ம் வகுப்பு மாதிரி தேர்வுகள் தொடக்கம் – குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு சிறப்பு கவனம்!!
பள்ளி முழுவதும் சோதனை:
மாணவிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அனைத்து மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனையின் முடிவில் முதல் கட்டமாக 20 மாணவிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்னர் இரண்டாம் கட்டமாக 36 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், ஆசிரியர் ஒருவரும் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்ட்டுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
பெற்றோர்கள் பாதிப்பு:
மாணவிகளை தொடர்ந்து அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளின் பெற்றோர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனையின் முடிவில் மாணவிகளின் பெற்றோர்கள் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்களிடம் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்