ஒரு மாதத்திற்கு வீட்டு வாடகை வசூலிக்கக் கூடாது – மத்திய அரசு உத்தரவு.!
கொரோனா பாதிப்பால் நாடெங்கிலும் மக்கள் பீதியில் உள்ளனர். இதனால் ஊரடங்கு நிலையில் மக்கள் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் வருமானமும் இல்லாமல் தவித்து வருகின்றனர். எனவே மத்திய அரசு 1 மாதத்திற்கு வீடு வாடகை வாங்க கூடாது என உத்தரவிட்டுள்ளது.
கொரோனாவை குணமாக்க புதிய சிகிச்சை முறை கண்டுபிடிப்பு !!!!
மத்திய அரசு உத்தரவு
மாணவர்கள், தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆகியோரிடம் இருந்து ஒரு மாதத்திற்கு வாடகையை கேட்கக் கூடாது என வீட்டு உரிமையாளர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு மீறி கேட்டாலும் வீட்டை காலி செய்ய சொன்னாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மத்திய உள்துறை விவகாரங்கள் துறை அமைச்சகம் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் ஏழை மக்கள், புலம்பெயர்ந்த மக்களுக்கு தற்காலிக தங்குமிடங்கள், உணவுகளுக்கான ஏற்பாடுகளை மாநில அரசுகளும் யூனியன் பிரதேசங்களும் உறுதிப்படுத்த வேண்டும்.
இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறதா..? மத்திய அரசு விளக்கம்..!
ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சம்பந்தப்பட்ட மாநில அரசோ அல்லது யூனியன் பிரதேச அரசோ அவர்களை சோதனை செய்து 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும். இதற்காக தற்காலிக தங்குமிடங்கள் அமைக்க வேண்டும். நிறுவனங்களும் தங்கள் பணியாளர்களின் முழு ஊதியத்தை எந்த பிடித்தமும் செய்யாமல் தாமதம் செய்யாமல் செலுத்த வேண்டிய தேதிகளில் செலுத்திவிட வேண்டும்.
மாணவர்கள், தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆகியோரிடம் இருந்து ஒரு மாதத்திற்கு வாடகையை அதன் உரிமையாளர்கள் கேட்கக் கூடாது. அது போல் அவர்கள் வாடகை கொடுக்காததை காரணம் காட்டி வீட்டை காலி செய்ய சொல்லக் கூடாது, மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக சுகாதார ஆய்வாளர் பணி – 334 காலி பணியிடங்கள்
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |