கொரோனாவை குணமாக்க புதிய சிகிச்சை முறை கண்டுபிடிப்பு !!!!
உலகம் முழுவதும் கொரோனா பரவிய நிலையில் இந்தியாவில் பல பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸை தடுக்க பல நாடுகளில் தீவிரமாக முயற்சிகள் நடந்து வருகிறது. இதை தொடர்ந்து கொரோனவை குணப்படுத்துவதற்காக பெங்களூரை சேர்ந்த மருத்துவர்கள் குழு ஒன்று புதிய மருத்துவ சிகிச்சை முறையை கண்டுபிடித்துள்ளது. பெங்களூர் எச்சிஜி மருத்துவமனை புற்றுநோய் நிபுணர் விஷால் ராவ் தலைமையில் இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் நமது உடலுக்குள் சென்ற பின் நோய் எதிர்ப்பு சக்தி செல்களால் கண்டுபிடிக்க முடியாது. காரணம் கொரோனா வைரஸ், உடலில் இருக்கும் சாதாரண செல் போல வேடமிட்டு, அதற்கு உரிய சிக்னல்களை அனுப்புவதால், நோய் எதிர்ப்பு சக்தி செல்கள் குழம்பி போய், கொரோனாவை கண்டுபிடிக்க முடியாமல் போகிறது. இதனால் உடலை தாக்கும் கொரோனா, நோய் எதிர்ப்பு சக்தி செல்களை மொத்தமாக செயலிழக்க செய்கிறது.
கொரோனா வைரஸுக்கு 70 வகை மருந்தா..? இந்திய ஆராய்ச்சியாளர்கள் தகவல்..!
கொரோனா தடுப்பு மருந்து
கொரோனாவை குணப்படுத்துவதற்காக பெங்களூரை சேர்ந்த மருத்துவர்கள் குழு ஒன்று புதிய மருத்துவ சிகிச்சை முறையை கண்டுபிடித்துள்ளது. பெங்களூர் எச்சிஜி மருத்துவமனை புற்றுநோய் நிபுணர் விஷால் ராவ் தலைமையில் இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. இது தொடார்பாக விஷால் ராவ் அளித்துள்ள பேட்டியில், நாங்கள் கண்டுபிடித்துள்ள மருந்து மனித உடலில் கொரோனா காரணமாக செயலிழந்த நோய் எதிர்ப்பு திறனை மீட்டு கொண்டு வருவது ஆகும்.
1508 டெக்னீசியன்கள் & 1000 செவிலியர் காலிப்பணியிடங்களை அவசரமாக நிரப்பும் தமிழக அரசு !!!
இது மருந்துதான். ஆனால் தடுப்பூசி கிடையாது. மனித உடலில் உள்ள சைட்டோகைனஸ் (cytokines) எனப்படும் எதிர்ப்பு சக்தி புரதம், நோய் செல்களை கண்டுபிடிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த சைட்டோகைனஸ்தான் பல்வேறு மருந்துகளை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நோய் எதிர்ப்பு புரதங்களிலும், வைரஸ்களை கண்டுபிடிப்பதிலும் இந்த சைட்டோகைனஸ் முக்கிய இடம் பிடித்துள்ளது.
பல்வேறு சைட்டோகைனஸ் கலவையை உருவாக்கி, மனித உடலில் மீண்டும் செலுத்துவதன் மூலம் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். கொரோனா செல்களை கண்டுபிடிப்பதில், நோய் எதிர்ப்பு செல்களை மீண்டும் தூண்டுவதில் இந்த சைட்டோகைனஸ் உதவும், என்று அவர் கூறியுள்ளார்.மேலும் இந்த வார இறுதியில் சோதனைக்கு தயார் செய்யப்படும். இதற்காக மத்திய அரசிடம் கேட்டுளோம். மேலும் உடலில் இருக்கும் இன்டர்பெரான் (interferon) எனப்படும் செல்கள் நோய் எதிர்ப்பு திறனில் முக்கிய பங்கு வகிக்கிறது.
தமிழகத்தின் தடுப்பு நடவடிக்கைகள் – முதல்வரின் அறிவிப்புகள்
இன்டர்பெரான் செல்கள் கொரோனா காரணமாக வெளியே சுரப்பது தடுக்கப்படுகிறது. இதுதான் நோய் எதிர்ப்பை குறைக்கிறது. இதனால் இதை செயற்கையாக நாம் உடலின் உள்ளே செலுத்த வேண்டும். இந்த இன்டர்பெரான் (interferon) மற்றும் சைட்டோகைனஸ் (cytokines) கலவை மற்றும் வேறு சில எதிர்ப்பு செல்கள் கலவை மூலம் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். கொரோனாவை கட்டுப்படுத்த இன்டர்பெரான் உதவும் என்பதற்கு எங்களிடம் சில சோதனை முடிவுகள் உள்ளது. இதை ஒன்றாக சேர்த்து சோதனை செய்ய போகிறோம். விரைவில் இதன் முடிவுகளை அறிவிப்போம் என்று, புற்றுநோய் நிபுணர் விஷால் ராவ் தெரிவித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |