வருமானவரி தாக்கல் செய்ய கால அவகாசம் நீடிக்கப்படாது- மத்திய அரசு விளக்கம்!!
2019-20 நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்ய தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கு ஏற்கனவே 3 முறை நீட்டிப்பு அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால் தற்போது பிப்ரவரி 15-ஆம் தேதிக்கு மேல் நீட்டிக்க வாய்ப்பில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வருமான வரி தாக்கல்:
கொரோனா ஊரடங்கு காரணமாக பல தொழில் நிறுவனங்கள் பல மாதங்களாக செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளதால் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் 2019-20 ஆம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதில் மத்திய நிதி அமைச்சகம் சலுகைகளை வழங்கியது. இதன்படி தனி நபர் 2019-20 ஆம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஜனவரி 10-ஆம் தேதி வரையும், தொழில் நிறுவனங்களுக்கான கால அவகாசத்தை பிப்ரவரி 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி – பள்ளிக்கல்வித்துறை தகவல்!!
கடந்த ஆண்டில் இது மூன்றாவது முறையாக இந்த கால நீட்டிப்பு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் அவகாசத்தை மேலும் நீட்டிக்க சில தொழில் நிறுவனங்கள் குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இது தொடர்பாக மத்திய அரசு பரிசீலிக்க உத்தரவிட்டனர்.
புதிய பதவி உயர்வு முறை குறித்த உத்தரவு ரத்து- வேளாண் பல்கலை பதிவாளர் அறிவிப்பு!!
இந்த சூழலில் வருமானவரி தணிக்கை செய்ய வேண்டிய கணக்குகளை தாக்கல் செய்ய அவகாசத்தை பிப்ரவரி 15-ஆம் தேதிக்கு மேல் நீட்டிக்க முடியாது என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்தது. தாக்கல் செய்யப்பட்ட வரி கணக்குகளை தணிக்கை செய்வதற்கு 1 மாதம் தேவைப்படும் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்