புதிய பதவி உயர்வு முறை குறித்த உத்தரவு ரத்து- வேளாண் பல்கலை பதிவாளர் அறிவிப்பு!!
மதுரை உட்பட கோவை வேளாண் பல்கலைக்கழக மற்றும் ஆராய்ச்சி அலுவலர்களுக்கு தகுதி மதிப்பீடு அடைப்படையில் பதவி உயர்வு அளிக்க உத்தரவிட்ட நிலையில் அந்த புதிய பதவி உயர்வு நடைமுறைக்கு தற்போது வேளாண் பல்கலைக்கழக ஆசிரியர்கள் அல்லாதோர் சங்கத்தின் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பினை ஒத்தி வைப்பதாக அந்த சங்கத்தின் பதிவாளர் தெரிவித்துள்ளார்.
புதிய பதவி உயர்வு முறை:
கோவை வேளாண் பல்கலைக்கழக மற்றும் ஆராய்ச்சி அலுவலர்களுக்கு புதிய பதவி உயர்வு நடைமுறை அறிவிக்கப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் நெல்லை உட்பட 13 இடங்களில் கல்லூரிகள் செயல்படுகின்றன. அதில் 36 வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்களில் 800-க்கு மேற்பட்ட இளநிலை உதவியாளர், தட்டச்சர், உதவி கண்காணிப்பாளர், உதவி கணக்கு அலுவலர்கள் உள்ளனர்.
குறைக்கப்பட்ட பாடங்கள் குறித்து அறிவிப்பு வெளியிட வேண்டும்- பள்ளிக்கல்வித்துறைக்கு கோரிக்கை!!
வழக்கமாக இவர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படும். ஆனால் இந்த ஆண்டு வழக்கமாக நடைபெறும் நடைமுறையில் மாற்றம் செய்து அலுவலர்களின் செயல்திறன் மதிப்பீடு அடிப்படையில் பணிஉயர்வு வழங்கப்படும் என பல்கலைக்கழக பதிவாளர் கிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டார்.
‘விருப்பம் உள்ள மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வரலாம்’ – அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!!
ஆனால் புதிய பதவி உயர்வு கொள்கைக்கு தமிழ்நாடு வேளாண் பல்கலை ஆசிரியர் அல்லாதோர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் தற்போது புதிய பதவி உயர்வு முறை குறித்து வெளியிட்ட உத்தரவை தற்போது ஒத்தி வைப்பதாக பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்