குறைக்கப்பட்ட பாடங்கள் குறித்து அறிவிப்பு வெளியிட வேண்டும்- பள்ளிக்கல்வித்துறைக்கு கோரிக்கை!!
தமிழகத்தில் வருகிற ஜனவரி 19-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் அறிவிப்பு வெளியிட்ட நிலையில், பொதுத்தேர்வு நெருங்கி வருவதால் பள்ளிகளில் குறைக்கப்பட்ட பாடங்கள் குறித்து அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை விரைவில் வெளியிட வேண்டும் என மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் குறித்த அறிவிப்பு:
தமிழகத்தில் பள்ளிகள் கொரோனா நோய் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. பள்ளிகள் மூடப்பட்டு 9 மாதங்கள் முடிவடைந்த நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து தமிழக அரசு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் பள்ளிகள் திறக்க பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு பள்ளிகள் வருகிற ஜனவரி 19-ஆம் தேதி முதல் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் திறக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டார்.
பள்ளிகள் திறப்பது குறித்த வழிமுறைகள் – சென்னை மாநகராட்சி அறிவிப்பு!!
இந்நிலையில் அனைத்து பாடங்களையும் ஆன்லைன் மூலமாக நடத்துவது கடினம். எனவே பாடங்களில் குறைப்பு செய்ய தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பாட திட்டத்தில் 50 சதவிகிதம் குறைக்கப்பட்டும், 10 முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 30% பாடங்கள் குறைக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை – தமிழக அரசு உத்தரவு!!
இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்போகும் இந்த நிலையில் குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிட வேண்டும் என, மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வழக்கம் போல் மார்ச், ஏப்ரல் மாதங்களில் வழக்கமாக நடைபெறும். ஆனால் சட்டமன்ற தேர்தல் அதே மாதங்களில் நடக்க உள்ளதால் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான பின் பொதுத்தேர்வு குறித்த தேதி வெளியிடப்படும் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்