மக்கள் தொகை கணக்கெடுப்பு முதல்கட்ட பணிகள் நிறைவு – 10.61 லட்சம் குடும்பங்கள் சுய கணக்கெடுப்பு!
தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதல் கட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளன. ஆகஸ்ட் 1 முதல் வீடு வீடாக நடைபெற்ற இந்தப் பணிகளில் 1.15 லட்சத்துக்கும் மேற்பட்ட கணக்கெடுப்பாளர்கள் ஈடுபட்டனர்.
10.61 லட்சம் குடும்பங்கள் பதிவு
முன்னதாக ஜூலை 17 முதல் 31-ம் தேதி வரை நடைபெற்ற சுய கணக்கெடுப்பு வசதி மூலம் தமிழகத்தில் 10.61 லட்சம் குடும்பங்கள் தங்களது விவரங்களை ஆன்லைனில் சமர்ப்பித்துள்ளன.
முதல் கட்ட கணக்கெடுப்பில் வீடு மற்றும் குடும்பம் தொடர்பான 33 முக்கிய கேள்விகளுக்கு தகவல்கள் சேகரிக்கப்பட்டன.
அடுத்த கட்டம் எப்போது?
முதல் கட்டப் பணிகள் முடிந்துள்ள நிலையில், தற்போது சேகரிக்கப்பட்ட தொழில்நுட்ப தரவுகளை ஒருங்கிணைக்கும் பணிகள் நடைபெற உள்ளன.
இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ம் ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நாடு முழுவதும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பில் சேகரிக்கப்படும் தனிநபர் தகவல்கள் சட்டப்படி ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



























