
தமிழகத்தில் உள்ள பள்ளி நிறுவனங்களுக்கு ஓர் நற்செய்தி.. இனி ஒரு பள்ளிக்கு அங்கீகாரம் பெற்றால் போதும்.. CBSE இன் புதிய விதிமுறை மாற்றம்..
பொதுவாக தனியார் பள்ளிகள் தொடங்க மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) மூலம் தடையில்லா சான்றிதழ் (No objection Certificate) பெற்றிருக்க வேண்டும். இந்த சான்றிதழ் குறிப்பிட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு மாநில அரசிடம் இருந்து பள்ளி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளிகளுக்கான சான்றிதழ் பெறுவதில் புதிய திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, “புதிய திருத்தம் படி, ஒரே நிர்வாகத்தின் கீழ் பல்வேறு பள்ளிகள் இருந்தால், தனித்தனியாக அங்கீகாரம் பெற வேண்டுமென பழைய விதிமுறை இருந்தது. இந்நிலையில் தற்போது ஒரு பள்ளிக்கு அங்கீகாரம் பெற்றால் போதும் என்றும், ஒரு நிர்வாகத்தின் கீழ் நாடு முழுவதும் இயங்கும் மற்ற பள்ளிகளுக்கு அங்கீகாரம் வாங்க தேவையில்லை என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) தெரிவித்துள்ளது”.

























