CBSE 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து ஜூன் 1 அன்று முடிவு – மத்திய அரசு தகவல்!!
நாடு முழுவதும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் உள்ள பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து ஜூன் 1 ஆம் தேதி ஒருங்கிணைந்த முடிவு எடுக்கப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு உள்ளிட்ட பல முக்கிய நுழைவு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வுகளை நடத்துவது குறித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் மாநில கல்வி அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுடன் உயர்நிலை கூட்டம் நடைபெற்றது.
தமிழக தொழிற்சாலைகளுக்கு முழு ஊரடங்கில் தளர்வுகள் – வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு!!
இந்நிலையில் பல மாநிலங்களில் இருந்து பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மாணவர்கள் நலன் கருதி 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட வேண்டும் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது. பெற்றோர்களும் பலர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர். ஆனால் சிலர் மாணவர்களின் எதிர்காலம் காரணமாக 12 ஆம் வகுப்பு தேர்வுகளை கட்டாயம் நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
மகாராஷ்டிரா மாநில அரசு 12 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வது மிகவும் ஆராய்ந்து தீர்வு செய்யக்கூடிய விஷயம் என தெரிவித்துள்ளது. இந்நிலையில் மாநிலங்கள் இது குறித்த அறிவிப்பை மத்திய கல்வி அமைச்சகத்திற்கு மே 25 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது குறித்து ஒருங்கிணைந்த முடிவு ஜூன் 1 ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.