சிபிஎஸ்இ 10,12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வுகள் – ஜூன் 11ம் தேதிக்குள் முடிக்க உத்தரவு!!
நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் ஜூன் மாதம் 11 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என மத்திய இடைநிலை கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.
10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு:
நாடு முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. மத்திய அரசு பள்ளிகள் திறப்பது குறித்து மாநில அரசு முடிவு செய்யலாம் என தெரிவித்தது. அந்த அறிவிப்பின் படி பல மாநிலங்களில் படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் சிபிஎஸ்இ பாடப்பிரிவின் கீழ் உள்ள பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் தேதியினை மத்திய இடைநிலை கல்வி வாரியம் வெளியிட்டது.
TN Job “FB Group” Join Now
அதன்படி 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே மாதம் 4 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. தற்போது அனைத்து பள்ளிகளிலும் அந்த மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சிபிஎஸ்இ வெளியிட்ட அறிவிப்பின் படி, கொரோனாவால் பாதிக்கப்பட்ட அல்லது குடும்பத்தில் தாய், தந்தை, சகோதரி போன்ற எவரேனும் கொரோனாவால் பாதிக்கபட்டால் அந்த மாணவர்களுக்கு சரியான நேரம் பார்த்து ஜூன் மாதம் 11 ஆம் தேதிக்குள் செய்முறை தேர்வுகளை நடத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை துவக்கம் – கல்வித்துறை ஆலோசனை!!
சிபிஎஸ்இ மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் எனவும், கொரோனா காரணமாக பொதுத்தேர்வு தள்ளிப்போக வாய்ப்புகள் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் அந்த மாணவர்களை தேர்வுக்கு அனுமதிப்பது குறித்த எந்த அறிவிப்பும் தற்போது வெளியிடப்படவில்லை.