தமிழகத்தை சேர்ந்த சி. பி. ராதா கிருஷ்ணன் ஜார்கண்ட் ஆளுநராக நியமனம் – ஜனாதிபதி உத்தரவு!
இந்தியாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி அவர்களின் உத்தரவின் பேரில் இன்று 13 மாநிலங்களுக்கானஆளுநர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் ஜார்கண்ட் மாநில ஆளுநராக தமிழகத்தை சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆளுநர்:
இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் ஆளுநர் கவர்னர் ரமேஷ் பயஸ் மாற்றம் செய்யப்பட்டு அவருக்குஇ பதிலாக தற்போது தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவரும் எம்பியுமான சிபி. ராதாகிருஷ்ணன் அவர்கள் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பாஜகவின் வளர்ச்சிக்காகவும் வெற்றிக்காகவும் உழைத்த முக்கிய தலைவர்களில் ஒருவர்.
28,000 த்தை தாண்டும் பலி எண்ணிக்கை – துருக்கி, சிரியா நிலநடுக்க சம்பவம்!
இவர் தமிழகம் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டுகளில் 2 முறை மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார். தற்போது கவர்னராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது வளர்ச்சியை பாராட்டி அரசியல் தலைவர்கள் இவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
அதனைத் தொடர்ந்து மேற்கு வங்காளம் மற்றும் மணிப்பூர் கவர்னராக இருந்து வந்த தமிழகத்தை சேர்ந்த இல. கணேசன் தற்போது நாகலாந்து மாநிலத்தின் ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேற்கண்ட மாநிலங்களை தொடர்ந்து குடியரசு தலைவர் அவர்களின் உத்தரவின் பேரில் இன்று 13 மாநிலங்களுக்கான ஆளுநர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.