பாரதி கண்ணம்மா சீசன் 2 ல் நடக்கும் எதிர்பாராத திருப்பங்கள் – குடும்பத்தின் சந்தேக பார்வையில் கண்ணம்மா!

0
பாரதி கண்ணம்மா சீசன் 2 ல் நடக்கும் எதிர்பாராத திருப்பங்கள் - குடும்பத்தின் சந்தேக பார்வையில் கண்ணம்மா!
பாரதி கண்ணம்மா சீசன் 2 ல் நடக்கும் எதிர்பாராத திருப்பங்கள் - குடும்பத்தின் சந்தேக பார்வையில் கண்ணம்மா!
பாரதி கண்ணம்மா சீசன் 2 ல் நடக்கும் எதிர்பாராத திருப்பங்கள் – குடும்பத்தின் சந்தேக பார்வையில் கண்ணம்மா!

பாரதி கண்ணம்மா 2 தொடரில் நடந்துள்ள விபத்துகள் காரணமாக கதை புதிய பாதையில் பயணிக்க தொடங்கி உள்ளது. இந்நிலையில், வரும் வாரம் பல அதிரடி திருப்பங்களும் நடக்க இருக்கிறது.

பாரதி கண்ணம்மா சீசன் 2:

பாரதி கண்ணம்மா சீசன் 2 சீரியல் ஆரம்பித்த முதல் வாரத்திலேயே டாப் கியரில் சென்று கொண்டிருக்கிறது. சித்ரா குடும்பத்தால் விரட்டப்பட்டு, எங்கு செல்வது என்று தெரியாமல் ஏதோ ஒரு பஸ்சில் ஏறி பயணிக்க தொடங்க, அங்கு கண்ணம்மா கதாபாத்திரம் அறிமுகம் ஆகிறார். இருவரும் நட்புடன் பேச ஆரம்பிக்க கண்ணம்மா சித்ராவிடம் தன் வாழ்க்கையில் நடந்த அனைத்து சுவாரஸ்யமான சம்பவங்களையும் சொல்லி வருகிறார்.

அம்ரிதாவை ஏற்க மறுக்கும் ஈஸ்வரி; வீட்டை விட்டு வெளியேறும் பாக்கியா – பாக்கியலட்சுமி சீரியல் அடுத்தகட்டம்!

அப்போது, சித்ராவை கொலை செய்ய வரும் கும்பல் ஒன்று தவறுதலாக கண்ணம்மாவை கொலை செய்ய, சித்ரா தான் தான் கண்ணம்மா என்று சொல்லி, கண்ணம்மாவின் குடும்பத்தை சந்திக்க வீட்டிற்கு செல்கிறார். கண்ணம்மாவின் அம்மாவிற்கு உடல்நிலை மோசமாக இருப்பதால் அவரை பார்க்க தான் கண்ணம்மா வீட்டிற்கு செல்கிறார். கண்ணம்மாவின் அக்கா அவரை பாசமாக வரவேற்க, தம்பி மற்றும் அப்பா இருவரும் சந்தேகப்படுகின்றனர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

அதனால், கண்ணம்மாவை தோண்டி, தோண்டி கேள்விகள் கேட்க சித்ராவும் கண்ணம்மா சொன்ன சிறு வயது நினைவுகளை எல்லாம் சொல்லி சமாளிக்கிறார். இதேபோல், பாரதியும் கண்ணம்மாவும் சந்திக்கும் காட்சிகள் இந்த வாரத்தில் வரும் என்றும், இவர்களின் காதல் கதை எப்படி தொடங்கும் என்றும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகரித்து உள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!