அம்ரிதாவை ஏற்க மறுக்கும் ஈஸ்வரி; வீட்டை விட்டு வெளியேறும் பாக்கியா – பாக்கியலட்சுமி சீரியல் அடுத்தகட்டம்!

0
அம்ரிதாவை ஏற்க மறுக்கும் ஈஸ்வரி; வீட்டை விட்டு வெளியேறும் பாக்கியா - பாக்கியலட்சுமி சீரியல் அடுத்தகட்டம்!
அம்ரிதாவை ஏற்க மறுக்கும் ஈஸ்வரி; வீட்டை விட்டு வெளியேறும் பாக்கியா - பாக்கியலட்சுமி சீரியல் அடுத்தகட்டம்!
அம்ரிதாவை ஏற்க மறுக்கும் ஈஸ்வரி; வீட்டை விட்டு வெளியேறும் பாக்கியா – பாக்கியலட்சுமி சீரியல் அடுத்தகட்டம்!

அம்ரிதாவை பல எதிர்ப்புகளையும் மீறி எழில் திருமணம் செய்து கொண்டதால், ஈஸ்வரி பாட்டி உட்பட அனைவரும் கோவத்தில் உள்ளனர். இதன் பிறகு வரும் காட்சிகள் மிகவும் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் வர உள்ளது.

பாக்கியலட்சுமி:

எழில்-வர்ஷா திருமணத்தை பாக்கியா நிறுத்தியதோடு மட்டுமில்லாமல், அம்ரிதாவை எழிலுக்கு திருமணம் செய்து வைக்க பாக்கியா முயற்சி செய்தது ராமமூர்த்தி தாத்தா, ஈஸ்வரி பாட்டி, செழியன் மற்றும் கோபி ஆகிய யாருக்குமே பிடிக்கவில்லை. குழந்தையோடு இருக்கும் விதவையான அம்ரிதாவை எழில் திருமணம் செய்தால், அவன் வாழ்க்கையில் கஷ்டப்படுவான் என்று தாத்தா எவ்வளவோ எடுத்து கூறியும், பாக்கியா கேட்கவில்லை.

தமிழக ரேஷன் கடைகளில் கண் கருவிழி பதிவு முறை – விரைவில் துவங்கும்… அமைச்சர் தகவல்!

ஒரு அம்மாவாக என் மகனின் விருப்பத்தை தான் நான் நிறைவேற்றுவேன் என்று உறுதியாக இருந்து பாக்கியா, எழில் – அம்ரிதா திருமணத்தை நடத்தி வைத்துள்ளார். அதன்பிறகு, அனைவரும் வீட்டிற்கு வரும்போது, ஈஸ்வரி பாட்டி பாக்கியா, எழில், அம்ரிதா ஆகிய யாரையுமே வீட்டிற்குள் வர கூடாது என்று சொல்லி வாசலில் நின்று சண்டை போட, பாக்கியா எவ்வளவு சொல்லியும் ஈஸ்வரி கேட்கவில்லை. இதனால், பாக்கியா நாங்கள் தனியாக வாழ்ந்து கொள்கிறோம் என்று கூறி, வீட்டை விட்டு வெளியே வருகிறார்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

அதன்பிறகு, கேட்டரிங் ஆபிசுக்கு அருகில் ஒரு சிறிய வீட்டை தனியாக வாடகைக்கு எடுத்து, பாக்கியா, எழில், அம்ரிதா மற்றும் நிலா பாப்பா ஆகியோர் வாழ்ந்து வருகின்றனர். ஆனால், பாக்கியா இல்லாமல் ஈஸ்வரி பாட்டி சாப்பாடு முதல் வீட்டு பராமரிப்பு வரை அனைத்திலும் சிரமப்படுகிறார். ஜெனிக்கும் சமைக்க தெரியாமல், செல்வியும் உதவிக்கு இல்லாமல் அல்லல்படும் ஈஸ்வரி, பின்னர் ராதிகா வீட்டிற்கு செல்கிறார். அங்கேயும் நிலைமை மோசமாக இருப்பதால், இதற்கு பாக்கியா கூடவே இருந்திருக்கலாம் என்று நினைக்கும் நிலைக்கு வருவார்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!