டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகளில் வயது வரம்பு அதிகரிக்க வேண்டும்-தேர்வர்கள் கோரிக்கை!!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் கடந்த வருடம் முதல் கொரோனா ஊரடங்கு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் தேர்வுக்கு தயாராகி வரும் தேர்வர்கள் வயது வரம்பு அதிகமாக்க கோரிக்கை வைத்துள்ளனர்.
டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குரூப் 1 தேர்வுகள் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 5-ஆம் தேதி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில் ஜனவரி 3,2021 அன்று தேர்வுகள் நடத்தப்பட்டன.
கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் குறைப்பு – தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு!!
நடந்து முடிந்த குரூப் 1 தேர்வுக்கு கடந்த வருடமே விண்ணப்பித்த தேர்வர்கள் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக ஏற்கனவே பதிவு செய்த தேர்வு மையங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ஏற்கனவே ஜேஇஇ தேர்வுகளில் தேர்வு மையங்களை மாற்ற வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் டிஎன்பிஎஸ்சி வழங்காதது தேர்வர்களிடம் வருத்தத்தை ஏற்படுத்தியது.
10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – இன்று முதல் கருத்துக்கேட்பு கூட்டம்!!
ஏற்கனவே நடந்து முடிந்த டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகளை தடுக்க அரசு சில புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவது பாராட்டத்திற்குரியது. இதனால் தேர்வுகளில் ஆள்மாறாட்டம் நடைபெறுவது தடுக்கப்படும். இதன்படி 2020-ஆம் ஆண்டுக்கான தேர்வுகள் திட்டப்பிடப்படி நடக்காத காரணத்தினால் அதிகபட்ச வயதை எட்டிய தேர்வர்கள் மீண்டும் தேர்வு எழுத முடியாத சூழ்நிலையில் உள்ளனர். இந்த ஆண்டு குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பித்து கொரோனா காரணமாக தேர்வு எழுத முடியாமல் போனதால், அடுத்த ஆண்டு குரூப் 1 தேர்வு அறிவிப்பு வரும் வரை காத்திருக்கவேண்டியுள்ளது. எனவே அதிகபட்ச வரம்பை எட்டிய மாணவர்களுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்க டிஎன்பிஎஸ்சி -க்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்