10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – இன்று முதல் கருத்துக்கேட்பு கூட்டம்!!

1
10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு - இன்று முதல் கருத்துக்கேட்பு கூட்டம்!!
10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு - இன்று முதல் கருத்துக்கேட்பு கூட்டம்!!
10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – இன்று முதல் கருத்துக்கேட்பு கூட்டம்!!

கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட நிலையில், 10,12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நெருங்குவதால் பொங்கல் பண்டிகைக்கு பிறகு பள்ளிகள் திறக்கலாம் என மூத்த கல்வித்துறை அதிகாரிகள் சார்பாக ஆலோசனை வழங்கப்பட்ட நிலையில், தற்போது பள்ளிகள் திறப்பது குறித்து மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் இரண்டாம் கட்டமாக இன்று முதல் நடைபெற உள்ளது.

பள்ளிகள் திறப்பு:

தமிழகத்தில் கொரோனா நோய் காரணமாக பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. நோய் தாக்கம் குறைந்து வரும் நிலையில் இந்தியாவில் சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து கடந்த நவம்பர் மாதம் 9-ஆம் தேதி பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் அதிகப்படியான பெற்றோர்கள் பள்ளிகள் திறக்க மறுப்பு தெரிவித்த நிலையில் பள்ளிகள் திறப்பது ஒத்தி வைக்கப்பட்டது.

தமிழகத்தில் குறைந்து வரும் வேலையின்மை விகிதம் – முதல்வர் ட்வீட்!!

தற்போது 10,12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நெருங்கி வரும் நிலையில் பொங்கல் பண்டிகைக்கு பின் பள்ளிகளை திறக்கலாம் என தமிழக பள்ளிக்கல்வித்துறை மூத்த அதிகாரிகள் ஆலோசனை வழங்கிய நிலையில் இதுகுறித்து 10,12ஆம் வகுப்பு மாணவர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் இன்று முதல் 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதுகுறித்து சென்னை எம்.ஜி.ஆர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர்களின் கருத்து கேட்பு கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டதை பார்வையிட வந்த பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் செய்தியாளர்களிடம் பேசிய போது, “தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில் பெற்றோர்களின் கருத்து கேட்பு கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதில் நாள் ஒன்றுக்கு 100 பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்படும்” என்று தெரிவித்தார்.

கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் குறைப்பு – தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு!!

கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறந்தால் மாணவர்களின் உடல்நலனை பாதுகாக்க அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் சங்கம் சார்பாக தெரிவித்துள்ளனர். ஏற்கனவே பூஜ்ஜியம் ஆண்டாக அறிவிக்கப்படாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்த நிலையில் தற்போது நடத்தப்படும் பெற்றோர்கள் கூட்டத்தில் பெற்றோர்கள் பள்ளிகள் திறக்கக்கூடாது என்று கூறினால் பள்ளிகள் திறப்பது மேலும் ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. பள்ளி திறப்பை தல்லிவைக்க வேண்டும் மாணவர்கள் உயிரில் விளையாட்டு தேவை இல்லை பள்ளிகள் உடனடியாக மூட வேண்டும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!