பேடிஎம் மூலமான பணம் பரிவர்த்தனை முறையை ரிசர்வ் வங்கி தடை செய்துள்ள நிலையில் தற்போது பேடிஎம் செயலியை பயன்படுத்தலாமா வேண்டாமா என்பது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பேடிஎம் வங்கி:
நாட்டின் சிறந்த பணமாற்றத் தளமாக விளங்கி வந்த Paytm பேமெண்ட் வங்கியின் பணப்பரிவர்த்தனை முறையை ரிசர்வ் வங்கி தடை செய்திருக்கிறது. அதாவது, பிப்ரவரி 29ஆம் தேதிக்கு பிறகு பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் மூலமாக எந்த ஒரு பண பரிமாற்றத்தையும் செய்து கொள்ள முடியாது என ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. இந்நிலையில், பயனர்கள் பேடிஎம் செயலியை பயன்படுத்தலாமா, வேண்டாமா என்கிற குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.
தினமும் பைக்குக்கு பெட்ரோல் போடுறீங்களா? கண்டிப்பா இதே கவனியுங்க!!
இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் இந்த புதிய உத்தரவிற்கு Paytm செயலியின் செயல்பாடுகள் எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது என இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் தெரிவித்துள்ளார். வாடிக்கையாளர்களின் நலனில் கருத்தில் கொண்டே பேடிஎம் வங்கி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பிப்ரவரி 29ஆம் தேதிக்கு பிறகு பேடிஎம் பேமென்ட் வங்கி எந்தவித டெபாசிட்களையும் ஏற்கக்கூடாது என பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கிக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.