
Breaking News: ஆதார் அட்டை இலவசமாக புதுப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு..!! UIDAI அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!
ஆதார் அட்டை என்பது ஒருவர் இந்தியர் என்பதை நிரூபிப்பதற்கான 14 இலக்க எண்களை கொண்ட தனித்துவ அடையாள ஆவணமாகும். மேலும், இந்த ஆதார் கார்டை 10 வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிப்பது என்பது கட்டாயமாகும். இந்நிலையில், இது தொடர்பாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ( UIDAI) முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது, மக்கள் தங்கள் ஆதாரில் உள்ள பெயர், முகவரி போன்றவற்றை எவ்வித கட்டணமும் செலுத்தாமல் இலவசமாக மாற்றி கொள்வதற்கு இன்று (14.12.2024 ) வரை அனுமதி அளித்து இருந்த நிலையில், மக்களின் நலன் கருதி தற்போது ஆதார் அட்டை புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 14 தேதி வரை நீட்டித்து இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ( UIDAI) அறிவித்துள்ளது.

























