அரசு பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டம் – சிறுதானியம் வழங்க பரிந்துரை!
தமிழக அரசு பள்ளிகளில் செயல்படும் காலை உணவு திட்டத்தில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் வகையில் சிறுதானிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காலை உணவு திட்டம்:
தமிழக அரசு பள்ளிகளில் 1 – 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் கடந்த வருடம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் வாயிலாக தற்போது பள்ளிகளில் இடைநிற்றல் மெதுவாக குறைந்துள்ளது. அத்துடன் வருகை சதவீதமும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. தற்போது திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு காலை நேரம் கேசரி, ரவா கிச்சடி சேமியா, உப்புமா போன்ற உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் உச்சம் தொட்ட தக்காளி விலை.. அமைச்சர் எடுத்த அதிரடி முடிவு – வெளியான தகவல்!
மேலும் உணவுடன் சேர்த்து தற்போது உள்ளூரில் விளைவும் காய்கறிகளும் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் மாணவர்களுக்கு ஊட்டச்சத்தை அளிக்கும் வகையில் காய்கறிகளுடன் சிறுதானிய உணவுகளையும் வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. இனி வரும் நாட்களில் ஒரு வாரத்தில் குறைந்தது இரண்டு நாட்களாவது உள்ளூரில் கிடைக்க கூடிய சிறு தானியங்களால் செய்யப்பட்ட உணவை குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.