பாக்கியாவிற்காக பழைய நிலைக்கு திரும்பிய தாத்தா – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், இந்த வாரம் கோபிக்கு எதிராக எழில் கிளம்பி இருக்கிறார். ராதிகா உடன் கோபியை பார்த்த எழில் அதை இந்த குடும்பம் எப்படி தாங்கி கொள்ளும் என்பதால் தனது தாத்தாவிடம் சொல்லி அழுகிறார். அதனால் தாத்தா மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி கோபியை ஒரு வழி செய்யப் போகிறார்.
பாக்கியலட்சுமி:
சின்னத்திரையில் ஏகப்பட்ட ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்த “பாக்கியலட்சுமி” சீரியல் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. கோபியின் லீலைகள் எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது. யாரவது கோபியை தடுக்கமாட்டாரா என அனைவரும் எதிர்பார்த்து இருக்கும் இந்த நேரத்தில் எழிலிடம் கோபி சிக்கி இருக்கிறார். அதனால் பெரிய பிரச்சனை கோபிக்கு வர இருக்கிறது. எழில் கோபியிடம் என்னுடைய அம்மாவிற்கு நீங்க செய்யும் துரோகத்தை அம்மா, இனியா, பாட்டி எப்படி எடுத்துக் கொள்வார் என்பது பற்றி உங்களுக்கு அக்கறையே இல்லை.
லட்சுமி செய்த காரியத்தால் கோபமடைந்த கண்ணம்மா – ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் அடுத்த திருப்பம்!
நானும் இது பற்றி யாரிடமும் சொல்லமாட்டேன் சொன்னால் தங்கமாட்டார்கள். ஆனால் நான் இப்படியே இருக்கமாட்டேன் ஒரு நாள் எல்லாருக்கும் இந்த உண்மை தெரியவரும். அந்த நேரத்தில் இந்த குடும்பம் அழுதால் நான் உங்களை சும்மா விடமாட்டேன் என சொல்கிறார். அதை கேட்டு கோபி பயப்படுகிறார். பின் எழில் யாரிடம் சொல்வது என தெரியாமல் தாத்தாவிடம் சொல்லி அழுகிறார். இந்த விஷயத்தை குடும்பம் எப்படி ஏற்றுக் கொள்ளும் என தெரியாமல் இருக்கிறார்.
அதனால் ராமமூர்த்திக்கு சீக்கரம் உடல்நிலை சரியாகி விடுகிறது. பாக்கியாவிற்காக அவர் நலமுடன் எழுந்துவிடுகிறார். அவர் நேராக ராதிகாவிடம் உண்மையை சொல்ல போக ஆனால் ராதிகா வீட்டை காலி செய்து சென்று விடுகிறார். அதனால் கோபியின் திட்டம் எல்லாம் நடக்கப் போகிறது. கோபியை எப்படி சமாளிப்பது என தெரியாமல் தாத்தாவும் எழிலும் வருத்தப்பட இருப்பது எல்லாம் இனி வரப்போகும் எபிசோடுகளில் காட்டப்பட இருக்கிறது.