லட்சுமி செய்த காரியத்தால் கோபமடைந்த கண்ணம்மா – ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் அடுத்த திருப்பம்!

0
லட்சுமி செய்த காரியத்தால் கோபமடைந்த கண்ணம்மா - 'பாரதி கண்ணம்மா' சீரியல் அடுத்த திருப்பம்!
லட்சுமி செய்த காரியத்தால் கோபமடைந்த கண்ணம்மா - 'பாரதி கண்ணம்மா' சீரியல் அடுத்த திருப்பம்!
லட்சுமி செய்த காரியத்தால் கோபமடைந்த கண்ணம்மா – ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் அடுத்த திருப்பம்!

விஜய் டிவி தொடர்களில் ஒன்றான பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்கள் மத்தியில் பொறுமையை இழக்க செய்யும் அளவுக்கு சீரியலின் கதை பார்வையாளர்களை சோதித்து வருகிறது. இந்த நிலையில் இன்றைய எபிசோடில் லட்சுமி செய்த காரியம் கண்ணம்மாவை கோபம் ஆக்கியுள்ளது.

பாரதி கண்ணம்மா:

‘பாரதி- க்கு கண்ணம்மா’ என்று ஆரம்ப கால கட்டத்தில் கொடி கட்டி பறந்த தொடர் இடைப்பட்ட காலத்தில் இருந்த இடம் தெரியாமல் போனது. ஆனால் கடந்த சில நாட்களாக புதைந்து கிடந்த புதையல் கிடைத்தது போல கதையை சூடுபிடிக்கும் வகையில் மெருகேற்றி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பையும், ஆர்வத்தையும் தூண்டியது. தற்போது ‘பழைய திருடி கதவை திறடி’ என்ற பழமொழிக்கு ஏற்ப பார்வையாளர்களின் பொறுமையை மீண்டும் இழக்கச் செய்துள்ளது. அதன்படி நேற்றைய எபிசோட்டில் வீட்டில் அனைவரும் பேசிக்கொண்டிருக்க ஹேமாவும், லட்சுமியும் சேர்ந்து ஒன்றாக வந்தனர். அதை பார்த்த அனைவருக்கும் ரொம்ப சந்தோஷம்.

கோபியை பற்றி தாத்தாவிடம் சொல்லி வருத்தப்படும் எழில் – “பாக்கியலட்சுமி” சீரியலில் நாளைய எபிசோட்!

பாரதியின் அப்பா என்னடா குட்டி திடீர்னு இங்கு வந்திருக்க என கேட்க ஏன் தாத்தா வரக்கூடாதா என லட்சுமி கேட்கிறாள். இவ்வாறு எல்லாரையும் உறவு முறை சொல்லி கூப்பிட்டாள். மேலும், இனிமே நாங்க ஃப்ரண்ட்ஸ் இல்ல, நான் அக்கா, இவ தங்கச்சி என லட்சுமி கூறுகிறாள். அந்த சமயம் பாரதி வந்து ஹேமாவை தூக்கி கொஞ்சினான் அதை கண்ட லட்சுமி நம்மளும் இப்படி அப்பா கூட ஜாலியா இருக்க முடிலயே என்று மனதுக்குள் வேதனைப்பட்டாள். அப்போது பாரதியிடம் நான் உங்கட ஒன்னு கேக்கணும் என்று சொல்கிறாள். பாரதியும் அப்படி என்ன கேக்க போறீங்க என்று புன்னகையுடன் கேட்க அவளோ எங்க அம்மா சமையல் செய்றதால ஹேமா சமையல் அம்மானு சொல்றா அப்படி இருக்கப்ப நானும் உங்கள டாக்டர் அப்பான்னு சொல்லவா? என்று கேட்கிறாள். அதற்கு ஹேமாவும் ஆமா நானும் இனி அப்படித்த கூப்பிட போறேன் என்று கத்தினார்.

முதலில் யோசித்த பாரதி பிறகு சம்மதிக்கிறான். இதையெல்லாம் வாசலில் நின்று கேட்கும் சௌந்தர்யா சந்தோஷப்படுகிறார். இதனிடையில் கண்ணம்மா சௌந்தர்யாவுக்கு போன் செய்து லட்சுமி பற்றி கேட்க பாரதியிடம் படித்துக்கொண்டு இருக்கிறாள் என கூறுகிறாள். அப்போது கண்ணம்மா லக்ஷ்மியை குறித்து கவலைப் பட்டு பேசிக்கொண்டிருக்க உடனே சௌந்தர்யா உனக்கு ஒன்னு தெரியுமா? அவ எப்பவும் பாரதி கிட்ட கூச்சத்தோடு பேசுவா ஆனா இப்போ சகஜமா பேசுறா, அதுமட்டுமில்லாம அவ இன்னைக்கு பாரதி கிட்ட உங்களை டாக்டர் அப்பானு கூப்பிட போறேன்னு சொன்னா என கூறுகிறாள். ஏன் அப்படி சொல்ற என கண்ணம்மா கேட்க அவ சரியாதான் சொல்லி இருக்கா இது உனக்கு நல்ல விஷயம் தானே என சௌந்தர்யா சொல்ல உடனே கண்ணம்மா கோவத்துடன் போனை வைக்கிறாள். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!