TNPSC குரூப் 4 VAO தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு 2022 – பாடத்திட்டம் & முழு விபரம் இதோ!
தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் நடத்த இருக்கும் குரூப் 4 தேர்விற்கான தேர்வு முறை, கால அவகாசம், மதிப்பெண்கள், பாடத்திட்டம் குறித்தான அனைத்து விவரங்களையும் TNPSC தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
குரூப் 4 தேர்வு:
தமிழக அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப ஒவ்வொரு ஆண்டும் குரூப் -1, குரூப் -2, குரூப் -4 ஆகிய தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். குரூப் 2 தேர்விற்கான அறிவிப்பு பிப்ரவரி மாதத்தில் வெளியானது. மேலும், மார்ச் மாத இறுதியில் குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் எனவும் தேர்வாணையம் அறிவித்துள்ளது. அமைச்சரவை பணிகள், தட்டச்சாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகிய பணியிடங்களுக்கு குரூப்- IV தேர்வு நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் நாளை மறுநாள் (மார்ச் 30) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தற்போது குரூப் -4 தேர்விற்கான தேர்வு முறை பற்றி பார்க்கலாம். அதாவது ஓஎம்ஆர் முறைப்படி மட்டுமே பதில் அளிக்க முடியும். பொது அறிவில் இருந்து 75 வினாக்களும், திறனறிவு மற்றும் புத்திகூர்மை பகுதிகளில் இருந்து 25 வினாக்களும், பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில் இருந்து 100 வினாக்களும் கேட்கப்படும். மொத்தமாக 200 மதிப்பெண்ணுக்கு குரூப் 4 தேர்வு நடைபெறும். தேர்வு எழுதும் நேரம் 3 மணி நேரம் வழங்கப்படுகிறது.
தேர்வர்கள் அனைவரும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஓஎம்ஆர் சீட்டில் பதில்களை குறிக்க வேண்டும். தேர்வு நடந்து முடிந்த பிறகு டி.என்.பி.எஸ்.சி தேர்வாணையம் கேள்விகளுக்கான பதில்களை வெளியிடும். அந்த விடையில் ஏதேனும் தவறுகள் இருப்பின் தேர்வாளர்கள் ஆட்சேபனைகளை வழங்கலாம். மேலும், ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 1.5 மதிப்பெண் வழங்கப்படுகிறது. தவறான பதிலுக்கு மதிப்பெண் எதுவும் குறைக்கப்படாது. பொது அறிவியல், நாட்டு நடப்புகள், புவியியல், இந்தியா மற்றும் தமிழகத்தின் வரலாறு மற்றும் கலாசாரம் இந்திய அரசியல், இந்தியப் பொருளாதாரம், இந்திய தேசிய இயக்கம் ஆகிய பகுதிகளில் இருந்து மட்டுமே பொது அறிவு வினாக்கள் கேட்கப்படும்.