மத்திய அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு – மத்திய அரசு திடீர் முடிவு!
மத்திய அரசு ஊழியர்களின் வருகை பதிவை சரியாக கண்காணிக்கும் பொருட்டு அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையை பின்பற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பயோமெட்ரிக்
மத்திய அரசு அலுவலகங்களில் ஊழியர்களின் வருகைப் பதிவில் பல்வேறு குளறுபடிகள் ஏற்படுவதாக தொடர்ந்து புகார் எழுப்பப்பட்டு வருகிறது. அதாவது, மத்திய அரசு துறை மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்கள் காலதாமதமாக பணிக்கு வருவது, பணிக்கு வராமல் இருந்தும் அலுவலகத்திற்கு வருகை தந்தது போல கணக்கு காட்டுவது, மாலையில் பணி முடியும் முன்பாகவே வீட்டிற்கு கிளம்புவது என ஊழியர்கள் பல்வேறு குளறுபடி வேலைகள் செய்து வருவதாக பல்வேறு புகார் எழுப்பப்பட்டு வந்தது.
இந்நிலையில், மத்திய அரசு துறை மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வருகிறார்களா என்பதனை சரிபார்க்கும் நோக்கில் பயோமெட்ரிக் வருகை பதிவினை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதாவது, ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் முறையில் மத்திய அரசு ஊழியர்களின் வருகைப்பதிவு செய்யப்படும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.