பள்ளிகள் மே 15 வரை மூடல், இரவு நேர ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!!
நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பரவல் தினசரி புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இந்நிலையில் மே 15ம் தேதி வரை பள்ளிகளை மூட உத்தரவிட்டு உள்ள மாநில அரசு, இரவு நேர ஊரடங்கு உத்தரவினையும் அமல்படுத்தி உள்ளது.
பள்ளிகள் மூடல்:
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மாநில அரசுகள் தொற்று நிலவரத்தை பொறுத்து கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் பீகாரில் இரவு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் பள்ளிகள், மால்கள், வழிபாட்டுத் தலங்கள் மே 15 வரை மூடப்படும் உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலை செமஸ்டர் தேர்வுகளில் புதிய நடைமுறைகள் – புத்தகத்தை பார்த்து எழுத அனுமதி!!
அனைத்து கடைகளும், வணிக நிறுவனங்களும் மாலை 6 மணிக்குள்ளும், அரசாங்க அலுவலகங்கள் ஒரு மணி நேரத்திற்கு முன்பே மூடப்பட வேண்டும் என்றும் அம்மாநில முதல்வர் கூறியுள்ளார். அனைத்து மால்கள், பூங்காக்கள், சினிமா அரங்குகள் மூடப்பட்டு, ஹோட்டல்களில் உணவுகளை பார்சல் மட்டுமே வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளதால் எவ்வித தேர்வுகள் நடத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
ஏற்கனவே பீகாரில் ஏப்ரல் 9 ம் தேதி, கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மாநில அரசு இரவு 7 மணி காலக்கெடுவை வழங்கியிருந்தது. பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பயிற்சி மையங்கள் ஏப்ரல் 18 வரை இன்னும் ஒரு வாரத்திற்கு மூடப்படும் என்று அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.