அண்ணா பல்கலை செமஸ்டர் தேர்வுகளில் புதிய நடைமுறைகள் – புத்தகத்தை பார்த்து எழுத அனுமதி!!
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் மே மாதம் நடைபெற உள்ள செமஸ்டர் தேர்வுகளில் மாணவர்கள் புத்தகம் பார்த்து தேர்வுகளை எழுதலாம் என புதிய நடைமுறையை பல்கலை நிர்வாகம் கொண்டு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது
அண்ணா பல்கலை அறிவிப்பு:
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் தீவிரமடைந்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த முதல்கட்ட நடவடிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளன. மேலும் கல்லூரிகளில் ஆன்லைன் மூலமாக மட்டுமே தேர்வுகள் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்தப்பட்டது. அதன் தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் 60 சதவிகிதத்திற்கு அதிகமான மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு முறையில் மாற்றம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மே மாதம் நடைபெற உள்ள தேர்வுகளில் ஏற்கனவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மென்பொருளை கொண்டு நடத்தப்பட உள்ள தேர்வு முறையை ரத்து செய்துள்ளது.
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தொடர் விடுமுறை – கல்வித்துறை அறிவிப்பு!!
அதற்கு பதிலாக மே மாதம் நடைபெற உள்ள தேர்வில் மாணவர்கள் புத்தகத்தை பார்த்து எழுத அனுமதிக்கப்படுகின்றனர். செமஸ்டர் தேர்வில் பாடங்களில் இருந்து நேரடியாக கேள்விகளுக்கு பதிலளிக்ககூடிய வகையிலும், பாடங்களைப் புரிந்து பதிலளிக்கும் வகையில் விளக்க வகை கேள்விகள் கேட்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த புதிய முறை இறுதியாண்டு மாணவர்கள் தவிர மற்ற அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பொருந்தும். இறுதியாண்டு மாணவர்களுக்கு பழைய நடைமுறையே தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.