திருமணம் ஆகாத பெண்களுக்கு ரூ.50,000 உதவித்தொகை – மாநில அரசு அறிவிப்பு!!
பீகார் மாநிலத்தில் திருமணமாகாத பெண்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதன்படி 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு ரூ.25,000, பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்கு ரூ.50,000 உதவித்தொகையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கான உதவித்தொகை:
பீகார் மாநில அரசு பெண்களின் முன்னேற்றத்திற்கான பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன்படி 2021-22 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதி அமைச்சருமான தார் கிஷோர் பிரசாத் நேற்று தாக்கல் செய்தார்.
TN Job “FB Group” Join Now
அதில் மாநிலத்தில் உள்ள திருமணமாகாத பெண்களில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.25 ஆயிரமும், இளநிலை பட்டதாரி பெண்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தில் புதிய பொறியியல் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன.
சென்னையில் மாபெரும் புத்தக கண்காட்சி 2021 – பிப்ரவரி 24 இல் தொடக்கம்!!
அவற்றிற்கு ரூ.110 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பீகாரில் புதிதாக 3 மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. மேலும் ரூ.500 கோடி நிதி கால்நடை பராமரிப்பு மற்றும் மீன் வளர்ப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் மாநிலத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் சோலார் மின் விளக்குகள் பொறுத்த ஏற்பாடுகள் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக மின்வாரிய ‘கேங்மேன்’ பணியிடங்கள் – பணி நியமனம் வழங்க உத்தரவு!!
முன்பு சர்க்கரை ஆலைகள் மூடப்பட்டது, 10 ஆம் வகுப்பு வினாத்தாள்கள் வெளியானது, வேளாண் சட்டங்கள், பெட்ரோல் விலை உயர்வு போன்ற பல பிரச்சனைகளை கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு உள்ளே போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் சட்டப்பேரவைக்கு வெளியேவும் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்