விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய அபிநய் – ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி “பிக்பாஸ்” சீசன் 5 நிகழ்ச்சியில் பதினோராம் வாரம் தொடங்கப்பட்ட நிலையில் இந்த வாரம் மக்களிடம் குறைவான வாக்குகள் பெற்று வெளியேறும் போட்டியாளர் யார் என மக்கள் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சி:
தமிழ் சின்னத்திரையில் மாறுபட்ட ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டு மக்களின் ஆதரவுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசன் 18 போட்டியாளர்களுடன் தொடங்கி தற்போது வரை 10 பேர் வெளியேறி 3 பேர் வைல்ட் கார்ட் என்ட்ரியில் வந்து 11 பேருடன் போட்டி சென்று கொண்டிருக்கிறது. மேலும் கடந்த சீசன்களை போல் இல்லாமல் போட்டியாளர்கள் அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு விளையாடி வருகின்றனர்.
தனது திருமணத்தை பற்றி கூறிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ விஜே தீபிகா – வாழ்த்தி வரும் ரசிகர்கள்!!
அதனால் பிக்பாஸ் வின்னராக யார் வருவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த வாரம் முதல் இறுதி சுற்றிற்கான போட்டி நடைபெற்று வருகிறது. அதனால் போட்டியாளர்களுக்கு கடினமான டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாரம் நாமினேஷன் இல்லாமல் போட்டியாளர்கள் அனைவரும் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் கடினமான போட்டிகள் வைக்கப்பட்டு அவர்கள் நாமினேஷனில் இருந்து காப்பாற்றபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத வகையில் மக்களின் குறைவான வாக்குகளை பெற்று இமான் அண்ணாச்சி வெளியேறினார். இந்த வாரம் யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடைசி இடங்களில் இருக்கும் அபிநய் அல்லது பாவ்னி வெளியேற வாய்ப்புள்ளது. கடந்த வாரம் இருந்த சர்ச்சைகளில் அவர்கள் வெளியேற அதிகம் வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த வாரம் முழுவதும் நடந்த போட்டிகளில் அவர்கள் காப்பாற்றப்பட இருக்கலாம் என்பதால் இந்த வாரம் அதை கணிக்க முடியாது.