சன் டிவி “கயல்” சீரியல் சஞ்சீவிற்கு கிடைத்த இரட்டை சந்தோசம் – குவியும் வாழ்த்துக்கள்!
தமிழ் சின்னத்திரையில் பிரபலமான நடிகர் பட்டியில் இருக்கும் ஒருவர் தான் சஞ்சீவ். அவருக்கு சில நாட்களுக்கு முன் மகன் பிறந்துள்ள நிலையில் புதிதாக விருது ஒன்று கிடைத்துள்ளது. அதனால் அவருடைய மனைவி வாழ்த்து சொல்லி பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
நடிகர் சஞ்சீவ்:
விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமடைந்தவர்கள் நடிகை ஆல்யா மானசா மற்றும் நடிகர் சஞ்சீவ். இந்த சீரியலில் காதலர்களாக நடித்து பின் உண்மையாகவே காதலித்து இருவரும் பின்பு திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு 2020 ஆம் ஆண்டு ஐலா என்ற பெண் குழந்தை பிறந்தது. சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஜோடியாக இருக்கும் இவர்களின் மகளுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் இருவரும் வெவ்வேறு டாப் டிவியில் முன்னணி சீரியலில் நடித்து வருகின்றனர்.
சமீபத்தில் ஆலியா மானசா இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்தார். அதனால் அவர் ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகினார். இந்நிலையில் இந்த அழகான ஜோடிக்கு சில நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த சில மணி நேரங்களில் குழந்தையின் புகைப்படத்தை சஞ்சீவ் வெளியிட்டு இருந்தார். ஏகப்பட்ட ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். மேலும் சமூக வலைத்தளங்களில் அந்த புகைப்படம் வைரலானது.
தனது மகனிற்கு அர்ஷ் என பெயர் வைத்துள்ளனர். குழந்தை பிறந்த சந்தோஷத்தில் இருக்கும் சஞ்சீவிற்கு தற்போது இரட்டை சந்தோசம் கிடைத்துள்ளது. அதாவது சமீபத்தில் நடந்த சன் சின்னத்திரை கலைஞர்களுக்காக சன் குடும்பம் விருதுகள் நிகழ்ச்சியில் சஞ்சீவிற்கு நட்சத்திர நாயகன் விருது கொடுக்கப்பட்டுள்ளது. அது குறித்த புகைப்படத்தை ஆலியா ஷேர் செய்து அதில் தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். மேலும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கின்றனர்.