பாக்கியாவை பிரியும் இனியா, கோபியை கொலை செய்த முயற்சித்த ராமமூர்த்தி – ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் ட்விஸ்ட்!

0
பாக்கியாவை பிரியும் இனியா, கோபியை கொலை செய்த முயற்சித்த ராமமூர்த்தி - 'பாக்கியலட்சுமி' சீரியலில் ட்விஸ்ட்!
பாக்கியாவை பிரியும் இனியா, கோபியை கொலை செய்த முயற்சித்த ராமமூர்த்தி - 'பாக்கியலட்சுமி' சீரியலில் ட்விஸ்ட்!
பாக்கியாவை பிரியும் இனியா, கோபியை கொலை செய்த முயற்சித்த ராமமூர்த்தி – ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் ட்விஸ்ட்!

பாக்கியலட்சுமி சீரியல் ஒவ்வொரு நாளும் திடீர் திருப்பங்களையும், பல ட்விஸ்டுகளையும் காட்டி வரும் நிலையில் இன்று நடக்க உள்ள எபிசோடில் இனியா சொன்னதை கேட்ட பாக்கியா ஒரு கணம் மனசு நொறுங்கியவரானார். இதை குறித்து இப்பதிவில் விரிவாக பார்க்கலாம்.

பாக்கியலட்சுமி:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நேற்று கோபி இனியாவிடம் கேட்டபோது அப்பா தான் முக்கியம் என்று சொன்னது, ஒரு பக்கம் எழில் அமிர்தாவை வம்பிழுத்த ரவுடிகளை காண செல்வது போன்று முடிந்தது. இன்றைய எபிசோடில் அதை தொடர்ந்து எழில் அமிர்தாவை அழைத்து செல்ல அவளும் தயங்கி கொண்டே ரவுடிகளை காண்பிக்க, அவர்களை அடி பின்னி எடுக்கிறார். அதன்பிறகு அமிர்தாவிடம் மன்னிப்பு கேட்க செய்கிறார்.

விரைவில் முடிவுக்கு வரும் விஜய் டிவி “செந்தூரப்பூவே” சீரியல் – ரசிகர்கள் அதிர்ச்சி!

ரவுடிகளின் ஒருவன் நீ யாரு இவளுக்கு என்ற கேள்வியை எழுப்ப அதற்கு எழில் உணர்ச்சிவசமாக ‘நா அவ புருஷன், எங்களுக்கு ஒன்றரை வயசுல ஒரு குழந்தை இருக்கு டா’ என்று சொல்ல அமிர்தா வாயடைத்தவளாக அதிர்ச்சியில் எழிலை பார்க்கிறார். அதன்பின்னர் வீட்டுக்கு வந்ததும் அமிர்தா அம்மா, அப்பாவிடம் உங்களுக்கு ஏதாவதுன்னா என்கிட்ட சொல்ல மாட்டீங்களா? பிள்ளை மாதிரின்னு வாயில மட்டும்தான் சொல்றீங்களா? என்று கோபமடைந்தவன். மேலும், இனிமேல் அவன் நம்ம பிரச்சனைக்கு வர மாட்டான் என சொல்கிறான்.

இதையெல்லாம் பார்த்த அமிர்தாவுக்கு என செய்வதென்றே புரியாதவளாக மனதுக்குள் ஒரு காதல் அலை மோதுகிறது. அப்போது அவளது கணவன் கணேஷ் புகைப்படத்திற்கு முன் நின்று எழில் என்கிட்ட லவ் சொன்னப்போ எனக்கு ஒன்னும் தோணல, வீட்டுக்கு அடிக்கடி வந்து எல்லா உதவிகள் செய்யுறப்போ கூட எனக்கு ஒன்னும் தோனல, ஆனா இப்போ எனக்கே தெரியாம எழிலை ரொம்ப பிடிச்சிருக்கு என்று படத்துடன் பேசுகிறள். இப்போ நான் என்ன செய்யட்டும்னு நீங்களே எனக்கு சொல்லுங்க என்று முடிக்கிறார்.

இந்தப் பக்கம் கோபி பற்றி அறிந்த அப்பா ஆத்திரத்தில் கழுத்தை பிடிக்க முயல்கிறார். அவரிடமிருந்து கோபி தப்பித்து ஓட உன்ன நான் சும்மா விடமாட்டேன் என அப்பா மிரட்டுகிறார். இதனிடையில் இனியா, நான் படிச்சு முடிச்சதும் பாரீன் போய் ஜாலியா இருப்பேன் என சொல்ல அதற்கு பாக்கியா அம்மாவை பார்க்கணும் தோணாதா? என கேட்கும் போது, அப்பப்போ உன்னை பார்க்க வருவேன் என சொல்கிறார். மேலும் அவளுடைய தோழியின் அப்பா, அம்மா விவாகரத்து செய்தது குறித்து கூறுகிறார். உடனே பாக்கியா அப்போ உன் பிரென்ட் இப்ப யாரு கூட இருக்கா? என் கேட்டதுக்கு அவ அப்பா கூட இருக்கா. நாளைக்கு உங்களுக்கும் அப்பாக்கும் இப்படி ஆனா கூட நான் அப்பா கூடத்தான் இருப்பேன் என்று சொல்லி செல்கிறார். அதை கேட்ட பாக்கியா அதிர்ச்சி அடைகிறாள். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!