‘பிக் பாஸ்’ வீட்டை விட்டு வெளியேறும் பாவ்னி? இந்த வார எலிமினேஷன்! ரசிகர்கள் அதிர்ச்சி!
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில், தற்போது ஏழு வாரங்கள் முடிவடைந்துள்ளது. எட்டாவது வாரத்தில் நாமினேட் செய்யப்பட்டவர்களில் இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி:
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த மாதம் 3 ஆம் தேதி தொடங்கப்பட்டு தற்போது 50 நாட்களை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது ஏழு வாரங்கள் முடிந்து எட்டாவது வாரம் தொடங்கி உள்ளது. இந்த வாரத்தில் 2 வைல்ட் கார்ட் என்ட்ரி வீட்டிற்குள் அனுப்பப்பட்டுள்ளனர். மேலும் 11 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். இந்த வார தலைவராக அபிநய் இருக்கிறார். அதனால் அவரை தவிர 6 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
‘ராஜா ராணி 2’ சீரியல் ஆல்யா மனசாவிற்கு சுகப்பிரசவம் – டெலிவரி பிளான்! அவரே அளித்த பதில்!
மேலும் தற்போது ஸ்கூல் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் அக்ஷரா மற்றும் சிபி இடையே தொடர்ந்து மோதல் நிலவி வருகிறது. முதன்முறையாக தாமரை மற்றும் பிரியங்கா இடையே வாக்குவாதம் நடைபெற்றது. இப்படி பரபரப்பான நிகழ்வுகளுடன் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கும் நிலையில், தற்போது மூன்றாவதாக வைல்ட் கார்டு என்ட்ரியில் ஒரு போட்டியாளர் உள்ளே வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேற இருக்கும் போட்டியாளர் யாராக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
அதன்படி இந்த வாரம் பாவ்னி வெளியேற அதிக வாய்ப்பு இருக்கிறது. அவர் மற்ற போட்டியாளர்களுடன் சேராமல் தனிமையாக இருக்கிறார். மேலும் அவரிடம் பேசினால் அதை புரிந்து கொள்ள முடியாமல் அவர் சண்டை போடுகிறார். இதனால் மக்கள் மத்தியில் அவர் மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் குறைவான வாக்குகள் பெற வாய்ப்புள்ளது. மேலும் அவருக்கு அடுத்தபடியாக வருண் எலிமினேட் ஆக அதிகம் வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் கணித்துள்ளனர்.