அக்கா தங்கச்சியாக மாறும் லட்சுமி & ஹேமா, திருமணம் பற்றி கண்ணம்மாவிடம் சொன்ன ஹேமா – இன்றைய எபிசோட்!

0
அக்கா தங்கச்சியாக மாறும் லட்சுமி & ஹேமா, திருமணம் பற்றி கண்ணம்மாவிடம் சொன்ன ஹேமா - இன்றைய எபிசோட்!
அக்கா தங்கச்சியாக மாறும் லட்சுமி & ஹேமா, திருமணம் பற்றி கண்ணம்மாவிடம் சொன்ன ஹேமா - இன்றைய எபிசோட்!
அக்கா தங்கச்சியாக மாறும் லட்சுமி & ஹேமா, திருமணம் பற்றி கண்ணம்மாவிடம் சொன்ன ஹேமா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், ஹேமாவை புரிந்து கொண்ட லட்சுமி அவரை தங்கச்சியாக ஏற்றுக் கொள்கிறார். பின் கண்ணம்மாவிடம் ஹேமா பாரதியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கேட்கிறார். அதை கேட்டு கண்ணம்மா அதிர்ச்சி அடைகிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், சௌந்தர்யா ஹேமாவை கொண்டு வந்து ஸ்கூலில் இறக்கவிட லட்சுமியிடம் சண்டை எல்லாம் போட கூடாது என சொல்கிறார். லட்சுமி உனக்கு தோழி மட்டுமல்ல அதையும் தாண்டி அக்கா மாதிரி என சொல்ல ஹேமா சிரிக்கிறார். அது எப்படி தோழி அக்கா ஆக முடியும் என கேட்க, நீ அவளுடைய அம்மாவை சமையல் அம்மா என கூப்பிடுகிறாய் அப்படி பார்த்தால் லட்சுமி உனக்கு அக்கா தான என சொல்கிறார். பின் சௌந்தர்யா அலுவலகம் செல்ல அங்கே ஹேமா மட்டும் நிற்கிறார். அப்போது ஒரு பெண் என் தங்கச்சியை ஏன் மிஸ்ஸிடம் சொன்னாய் என சொல்லி ஹேமாவை அடிக்க வர லட்சுமி வந்து அவரை தடுக்கிறார்.

TN Job “FB  Group” Join Now

லட்சுமி அந்த பெண்ணை அடிக்க வர அவர்கள் ஓடி விடுகின்றனர். பின் லட்சுமியிடம் ரொம்ப நன்றி என சொல்ல, இனிமேல் நாம அக்கா தங்கச்சி மாதிரி என லக்ஷ்மியும் சொல்ல சௌந்தர்யா அதை கேட்டு சந்தோசப்படுகிறார். பின் சௌந்தர்யாவிடம் நீங்க என்னுடைய சொந்த பாட்டி போல இருக்கீங்க பாட்டி பத்தி அடிக்கடி அம்மா பேசுவார் அது போலவே நீங்க இருக்கீங்க என சொல்கிறார். பின் ஹேமா லட்சுமி தோளில் கையை போட்டு ஒற்றுமையாக போவதை பார்த்து சௌந்தர்யா சந்தோசப்படுகிறார்.

பின் மருத்துவமனையில் வெண்பா இருக்க பாரதி வருகிறார். அவர் கண்ணம்மாவை பிடிக்கவில்லை என சொல்லிவிட்டு அவள் மகளை காணவில்லை என்று சொன்னதும் கிளம்பாமல் இருந்தாய் ஆனால் நீ தான் லக்ஷ்மியை வீட்டில் விட்டு வந்திருக்கிறாய் இதை நான் கேட்டால் உனக்கு கோவம் வரும் என சொல்ல, கோர்ட்டில் கேஸ் நடந்து கொண்டிருக்கிறது. அங்கே சேர்ந்து வாழ தீர்ப்பு சொன்னால் நீ வாழ தயாராக இருப்ப போல என சொல்கிறார். வருண் தான் அப்பா என்பதை ஏன் சொல்லாமல் இருக்கிறாய் என கேட்கிறார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மார்ச் 31க்குள் இதை செய்தால் தொகை அதிகரிக்கும்!

பின் பாரதி கடுப்பேத்தாமல் கிளம்பு என சொல்ல வெண்பாவிற்கு போன் ஒன்று வருகிறது. இவன் எதற்கு போன் செய்கிறான் என வெண்பா பதட்டம் அடைகிறார். பின் ஸ்கூலில் இருக்கும் போது மிஸ் வந்து எல்லாரும் குடும்பத்தில் இருப்பவர்கள் பெயரை எழுந்துங்கள் என சொல்ல, லட்சுமி கண்ணம்மா புகைப்படத்தை பார்த்து நீ மட்டும் தான் இருக்கிறாய் என நினைக்கிறார். அப்போது ஹேமா பாத்ரூம் போக ஹேமா நோட்டை எடுத்து பாரதி புகைப்படத்தை எடுத்து கண்ணம்மா அருகே ஓட்டுகிறார். பின் அப்பா லக்ஷ்மியை மகளாக ஏற்றுக் கொள்ளமாட்டேன் என சொல்ல எதாவது காரணம் இருக்கும் மத்தபடி அவர் நல்லவர் தான என நினைக்கிறார்.

அதன் பின் கண்ணம்மா சாப்பாடு கொண்டு வர ஹேமாவும் லக்ஷ்மியும் சாப்பிட வருகின்றனர். இருவரும் சண்டை எல்லாம் முடிந்து சேர்ந்துவிட்டீர்களா என கேட்க, ஆமாம் நாங்க இப்போது அக்கா தங்கச்சி ஆயிட்டோம் என ஹேமா சொல்கிறார். அதை கேட்டு கண்ணம்மா சந்தோசப்படுகிறார். பின் மிஸ் அழைப்பதாக லட்சுமி கிளம்ப, ஹேமா கண்ணம்மாவிடம் ஒன்று கேட்க வேண்டும் என சொல்கிறார். என் வீட்டில் எல்லாரும் இருந்தாலும் அப்பா தனியாக தான் இருக்கிறார். எல்லாரும் என் அப்பாவிடம் சண்டை போடுவார்கள். என் அப்பா மிகவும் நல்லவர் ஆனால் அவரை புரிந்து கொள்ள யாரும் இல்லை. அதனால் நீங்க லட்சுமி அப்பாவும் வரவே மாட்டார் என சொல்லி இருக்கீங்க, அதனால் நீங்க என் டாடியை கல்யாணம் செய்து கொள்ளுங்கள் என செல்ல கண்ணம்மா அதிர்ச்சி அடைகிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!