Airtel நிறுவனம் சார்பில் ஒவ்வொரு மாதமும் ரூ.7000 – யார் யாருக்கு தெரியுமா? முழு விபரம் இதோ!
ஏர்டெல் நிறுவனம் தந்தையான ஆண் ஊழியர்களுக்கு தனது மனைவி மற்றும் குழந்தையை பார்த்துகொள்ள 8 வாரம் விடுமுறை அளிக்கப்படும் என்று அண்மையில் அறிவிப்பை வெளியிட்டது. இதனை தொடர்ந்து தற்போது பெண் ஊழியர்களுக்கும் விடுமுறை தினத்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
விடுமுறை தினங்கள்
இந்தியாவில் ஏர்டெல், ஜியோ, வோடபோன் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கி வருகின்றன. இதில் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் நிறுவனத்தின் கீழ் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்நிறுவனம் தனது ஊழியர்களுக்கு பல்வேறு வகையான சலுகைகளை வழங்கி வருகிறது. இதில் குறிப்பாக ஆண் ஊழியர்களுக்கு அண்மையில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மார்ச் 31க்குள் இதை செய்தால் தொகை அதிகரிக்கும்!
இதில் தெரிவித்தாவது, தந்தையான ஆண் ஊழியர்கள் தங்களின் மனைவி மற்றும் குழந்தையை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று 8 வாரம் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு ஆண் ஊழியர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து பெண் ஊழியர்களும் தங்களுக்கு மகப்பேறு விடுமுறை வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து தற்போது பெண் ஊழியர்களுக்கும் விடுமுறை குறித்த அறிவிப்பை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதில் கூறியதாவது, பெண் ஊழியர்களுக்கு குழந்தை பிறந்தால் அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.7000 உதவித்தொகை வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உதவித் தொகை குழந்தைக்கு 18 மாதங்கள் ஆகும் வரை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை பெண் ஊழியர்கள் குழந்தையை தத்தெடுத்தாலும் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் தற்போது பெண் ஊழியர்களும் மகிழ்ச்சியில் உள்ளார்கள். மேலும் இந்த திட்டம் மிகுந்த வரவேற்பையும் பெற்றுள்ளது.