மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மார்ச் 31க்குள் இதை செய்தால் தொகை அதிகரிக்கும்!
இந்தியாவில் கொரோனா தொற்றுநோய் காரணமாக குழந்தைகள் கல்வி உதவித்தொகையை பெறாத மத்திய அரசு ஊழியர்கள் மார்ச் 31ம் தேதிக்குள் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது
உதவித்தொகை:
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த வருடம் முதல் 31% ஆக அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான ஊழியர்களும் ஓய்வூதியர்களும் பயன் பெற்று வருகின்றனர். அதனை தொடர்ந்து 2022ம் ஆண்டு முதல் அகவிலைப்படி மேலும் 3% உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதம் மூலம் மொத்த அகவிலைப்படி 34% ஆக அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. மத்திய அரசை தொடர்ந்து மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கியது. இந்த நிலையில் 7வது ஊதியக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் ஊதிய உயர்வு கிடைக்கும் என்ற தகவலும் வந்துள்ளது.
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் மரணத்தை தழுவிய கோபியின் அப்பா – ரசிகர்கள் அதிர்ச்சி!
அதன்படி இனி அடிப்படை ஊதியம் 18,000 ரூபாயிலிருந்து 26,000 ஆக உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் கொரோனா தொற்றுநோய் காரணமாக தங்கள் குழந்தைகளின் கல்வி உதவித்தொகையை பெற முடியாமல் இருந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் மத்திய அரசு ஊழியர்களும் தங்கள் குழந்தைகளின் கல்விக்கான உதவித்தொகையை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 2 வருடங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால் இந்த கல்வி உதவித்தொகையை பெற முடியவில்லை. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல வகுப்புகள் நடைபெற்று வருவதால் மத்திய அரசு ஊழியர்கள் கல்வி உதவித்தொகை பெற தேவையான ஆவணங்களை மார்ச் 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் போது குழந்தையின் ரிப்போர்ட் கார்ட், சுய சான்றளிக்கப்பட்ட நகல் மற்றும் கட்டண ரசீது ஆகியவையும் இணைக்கப்பட வேண்டும்.