விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் மரணத்தை தழுவிய கோபியின் அப்பா – ரசிகர்கள் அதிர்ச்சி!
கோபி குறித்தான உண்மை நிலவரம் பாக்கியாவிற்கு எப்போது தெரியவரும் என எதிர்பார்த்த நேரத்தில் ராமமூர்த்தி தாத்தா இறக்கும்படியான ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிப்பரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. பாக்கியா கண்ணில் மண்ணை அள்ளி கொட்டிவிட்டு ராதிகாவை ரகசியமாக கோபி காதலித்துக் கொண்டிருக்கிறார். இதனால் தன்னுடைய காதலுக்கு தடையாய் இருக்கும் பாக்கியாவை விவாகரத்து செய்ய கோபி முடிவெடுக்கிறார். பாக்கியாவிற்கு தெரியமலேயே விவாகரத்திற்கான அத்தனை ஏற்பாடுகளையும் கோபி செய்துவிடுகிறார்.
12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? இந்திய கடற்படையில் காத்திருக்கும் 2500 காலிப்பணியிடங்கள் !
நாளுக்கு நாள் பாக்கியாவுடன் இருக்கும் நேரத்தை கோபி குறைத்து விடுகிறார். இரவு நேரங்களில் கூட பாக்கியா வீட்டிற்கு செல்லாமல் ராதிகா வீட்டிலேயே தங்கி விடுகிறார். கோபி வீட்டிற்கு வராததை நினைத்து பாக்கியா மிகவும் வருத்தப்படுகிறார். பின்பு ஆபீஸில் ஏதேனும் முக்கிய வேலையாக இருக்கும் என அவரே அவருக்கு சமாதானம் கூறிவிட்டு நிம்மதியடைகிறார். பாக்கியாவின் கண்ணுக்கு முன்னாள் ஏமாற்றிக் கொண்டிருக்கும் கோபியை பாக்கியா நம்பி கொண்டிருக்கிறார்.
இந்த விவாகரத்து செய்தி பாக்கியாவிற்கு தெரிந்து என்ன நடக்கும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்த சமயத்தில் தற்போது ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது கோபியின் அப்பாவான ராமமூர்த்தி திடீரென இறக்கும் படியான ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. நாளுக்கு நாள் ராமமூர்த்தியின் உடல்நிலை தேறிக் கொண்டிருந்த நிலையில் யாருமே எதிர் பாராத நேரத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. ராமமூர்த்தியின் இறப்பால் குடும்பமே உடைந்து போகிறது.