முல்லையை தேடி கண்டுபிடித்த கதிர், குழந்தை தேவையில்லை நீ தான் வேண்டும் என சொல்லும் நெகிழ்ச்சியான தருணம் – இன்றைய எபிசோட்!

0
முல்லையை தேடி கண்டுபிடித்த கதிர், குழந்தை தேவையில்லை நீ தான் வேண்டும் என சொல்லும் நெகிழ்ச்சியான தருணம் - இன்றைய எபிசோட்!
முல்லையை தேடி கண்டுபிடித்த கதிர், குழந்தை தேவையில்லை நீ தான் வேண்டும் என சொல்லும் நெகிழ்ச்சியான தருணம் - இன்றைய எபிசோட்!
முல்லையை தேடி கண்டுபிடித்த கதிர், குழந்தை தேவையில்லை நீ தான் வேண்டும் என சொல்லும் நெகிழ்ச்சியான தருணம் – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், குடும்பத்தில் அனைவரும் முல்லையை காணாமல் பதட்டத்துடன் இருக்கின்றனர். பின் முல்லையின் பெற்றோர் வர அவர்களுக்கும் எல்லா உண்மையும் தெரியவருகிறது. பின் கதிர் முல்லையை தேடி கண்டுபிடித்து சமாதானம் செய்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், முல்லையை காணாமல் அவளது அப்பா வந்து தனத்திடம் பேசுகிறார். அப்போது தனம் கதிர் உடன் தான் முல்லை இருக்கிறார் என சொல்லி சமாதானம் செய்கிறார். பின் தனம் மூர்த்திக்கும் ஜீவாவிற்கு போன் செய்து உண்மையை சொல்லு என சொல்ல, மூர்த்திக்கு போன் செய்து அவசரம் வாங்க என சொல்கிறார். பின் மூர்த்தி என்ன விஷயம் என கேட்க மீனா நானும் முல்லையும் மருத்துவமனைக்கு சென்று இருந்தோம். அப்போ முல்லைக்கு குழந்தை பிறக்காது என சொல்லிட்டாங்க என சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

பின் மூர்த்தி அதை கேட்டு அதிர்ச்சி அடைய, கதிர் முல்லையை தேடி சென்றிருக்கிறார் என சொல்கிறார். ஜீவா மீனாவிடம் ஏன் தனியாக விட்டு வந்தாய் என கேட்க, மீனா அவங்க மிகவும் அழுதார் அந்த நேரத்தில் அவங்க சொல்வது சரியாக தான் இருந்தது என சொல்ல, மூர்த்தி அவர்களை எங்கே தேடுவது என தெரியாமல் இருக்கிறார். பின் ஜீவாவும் கண்ணனும் அவர்களை தேட கிளம்புகின்றனர். அப்போது முல்லை அப்பா அம்மா தேடி வருகின்றனர். மாப்பிள்ளை மறுபடியும் வீட்டிற்கு வந்தாராம் என கேட்க ஏன் எல்லாரும் பதட்டமாக இருக்கீங்க என கேட்கிறார்.

அப்போது தனம் அவளை காணாமல் பதட்டமாக இருப்பதாக சொல்கிறார். எப்போது இருந்து காணவில்லை என கேட்க, மீனா நானும் முல்லையும் மருத்துவமனைக்கு போனோம் அங்கே முல்லைக்கு குழந்தை பிறக்காது என சொல்லிட்டாங்க என்று சொல்கிறார். பின் முல்லையின் அம்மா அழ ஜீவாவும் கண்ணனும் முல்லையை தேடி அலைகின்றனர். மறுபக்கம் முல்லை நடந்து வரும் போது செருப்பு அறுந்துவிடுகிறது. அதை போட்டுவிட்டு முல்லை நடந்து செல்கிறார். பின் ஜீவாவும் கண்ணனும் முல்லையின் தோழிகள் வீட்டில் தேடுகிறார். முல்லை ஒரு குளத்தின் அருகே இருக்க, கதிர் அந்த பக்கம் வருகிறார்.

அக்கா தங்கச்சியாக மாறும் லட்சுமி & ஹேமா, திருமணம் பற்றி கண்ணம்மாவிடம் சொன்ன ஹேமா – இன்றைய எபிசோட்!

அப்போது கதிர் முல்லையின் செருப்பை பார்த்துவிட்டு முல்லையை தேடுகிறார். அப்போது தூரத்தில் முல்லை இருப்பதை பார்த்துவிட்டு கூப்பிடுகிறார். ஆனால் முல்லை அழுது கொண்டே இருக்கிறார். பின் முல்லை அருகே வந்து கூப்பிட, டாக்டர் எனக்கு குழந்தையே பிறக்காது என்று சொல்லிட்டாங்க, நீங்க என்னிடம் இருந்து மறைத்து விட்டீர்கள். எனக்கு குழந்தை பிறக்காதாம் நான் எவ்வளவு சந்தோசமாக இருந்தேன். என்கிட்டே இருந்து ஏன் மறைத்தீர்கள் என கேட்க என்னால் உன்னிடம் சொல்ல முடியவில்லை என சொல்கிறார்.

சரி வா வீட்டிற்கு போகலாம் என சொல்ல, வீட்டில் எல்லாரையும் எப்படி பார்ப்பேன் என சொல்கிறார். என்னை பார்க்காமல் யாரை பார்ப்பாய் என கேட்க நான் வரவில்லை என முல்லை சொல்கிறார். பின் முல்லை உங்களுக்கு நான் வேண்டாம் என சொல்ல எனக்கு நீ தான் முக்கியம் நீ இல்லாமல் இப்பவே பாதி செத்துட்டேன் என சொல்கிறார். எனக்கு குழந்தையே பிறக்காது என சொல்ல, குழந்தையா முக்கியம் எனக்கு நீ தான் முக்கியம் என சொல்கிறார். என்னை பற்றி நீ யோசிக்கவே மாட்டியா என கேட்கிறார். எனக்கு நீ மட்டும் தான் வேண்டும் உன்னை நான் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என சொல்கிறார். உன்னால் தான் என் வாழ்க்கையே மாறி இருக்கிறது. ஆனால் உனக்கு குழந்தை தான் முக்கியம் என சொல்கிறார். உலகத்தில் எத்தனை அதிசயம் இருக்கிறது அது போல உனக்கும் குழந்தை பிறக்கும் நீ அதை நம்ப வேண்டும் என சொல்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!