இன்னும் 6 மாதத்தில் முடிவுக்கு வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல்? விறுவிறுப்பாகும் அடுத்தகட்ட கதைக்களம்!
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் தற்போது பாரதியும், கண்ணம்மாவும் 6 மாத காலம் சேர்ந்து இருக்க வேண்டும் என கோர்ட் தீர்ப்பு கொடுத்திருக்கும் நிலையில், இன்னும் 6 மாதத்தில் இந்த சீரியல் முடிவுக்கு வருமா என்கிற சந்தேகங்கள் எழுந்துள்ளது.
பாரதி கண்ணம்மா
இதுவரை ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் ஹேமாவை வைத்து பாரதியும் கண்ணம்மாவும் போடும் சண்டைகள் ஜவ்வாக இழுத்து வந்த நிலையில் இந்த பிரச்சனைக்கு தற்போது ஒரு தீர்வு கிடைத்துள்ளது. அதிலும் கண்ணம்மாவுக்கு தொல்லை கொடுத்து வந்த வெண்பா தற்போது ஜெயிலில் இருக்கிறார். இருந்தாலும் அவரது வில்லத்தனம் ஒருபக்கம் நீடித்து வருகிறது. மறுபுறத்தில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரசிகர்களை பதறவைக்கும் விதமாக கோர்ட் காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.
‘தல’ தோனி வீட்டில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டம் – வைரலாகும் வீடியோ!
இப்படி இருக்க கண்ணம்மாவிடம் இருந்து கண்டிப்பாக விவாகரத்து கிடைத்து விடும் என பாரதி காத்திருக்கிறார். ஆனால் கோர்ட்டில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியாக பதிலளிக்கவும் முடியாமல், கண்ணம்மாவை அவமானப்படுத்தவும் மனமில்லாமல் சிக்கித் தவிக்கிறார் பாரதி. இப்போது கண்ணம்மாவை விவாகரத்து செய்வதற்கு பாரதி சொல்லும் காரணங்கள் போதுமானது அல்ல என கருதும் நீதிபதி, இருவரையும் 6 மாத காலம் சேர்ந்து வாழ வேண்டும் என உத்தரவிடுகிறார்.
பிரபல நடிகர் காளிதாஸ் ஜெயராம் ஹோட்டல் அறையில் சிறைவைப்பு – ரசிகர்கள் அதிர்ச்சி!
இப்போது கோர்ட்டின் உத்தரவின் படி பாரதியும், கண்ணம்மாவும் சேர்ந்து வாழ உள்ளனர். ஏற்கனவே எலியும், பூனையுமாக சண்டையிட்டு கொண்டிருக்கும் இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் இருந்தால் என்னென்ன கலவரம் நடக்கும் என்பதை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். அதே நேரத்தில் 6 மாத காலத்திற்குள் கண்ணம்மா பற்றிய உண்மையை பாரதி புரிந்து கொள்வாரா என்றும் 6 மாதத்தில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் முடிவுக்கு வந்து விடுமா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.