இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு வங்கி விடுமுறைகள் அறிவிப்பு – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

0
இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு வங்கி விடுமுறைகள் அறிவிப்பு - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு வங்கி விடுமுறைகள் அறிவிப்பு - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு வங்கி விடுமுறைகள் அறிவிப்பு – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

இது பண்டிகை காலமாக இருப்பதால் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் இன்று (ஏப்ரல்.14) முதல் அடுத்த 4 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அது எந்தெந்த மாநிலங்களுக்கு என்பது குறித்த விவரங்களை இப்பதிவில் பார்க்கலாம்.

வங்கி விடுமுறை

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) விடுமுறை நாட்காட்டியின்படி, பல்வேறு பண்டிகைகள் காரணமாக இன்று (ஏப்ரல் 14) முதல் ஏப்ரல் 17 வரை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கத்தின் படி, வங்கிகளுக்கான இந்த விடுமுறைகள் பேச்சுவார்த்தை கருவிகள் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்படுள்ளன. இப்போது இந்த மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்காட்டிகளின் படி பல்வேறு பண்டிகைகள் காரணமாக நாடு முழுவதும் உள்ள வங்கிகள் சுமார் 15 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்பதை வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோருக்கு முக்கிய அறிவிப்பு – அலைமோதும் கூட்டம்!

இந்த 15 நாட்களில் ஏற்கனவே ஒரு சில நாட்களுக்கான வங்கி விடுமுறைகள் முடிந்து விட்டது. இதனை தொடர்ந்து இன்று (ஏப்ரல் .14) முதல் அடுத்த 4 நாட்களுக்கு ஒரு சில மாநிலங்களில் வங்கிகள் அடைக்கப்பட இருக்கிறது. இந்த விடுமுறைகள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் வித்தியாசமாக இருக்கும். இருப்பினும், பொது பண்டிகை காலங்களில் இந்தியா முழுவதும் உள்ள வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது ஏப்ரல் 14 முதல் ஏப்ரல் 17 வரை வங்கிகள் மூடப்படுவது எதற்காக என்ற விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

ஏப்ரல் 14 – டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஜெயந்தி/மஹாவீர் ஜெயந்தி/பைசாகி/வைசாகி/தமிழ் புத்தாண்டு தினம்/சீராபா/பிஜு விழா/போஹாக் பிஹுவை முன்னிட்டு வங்கிகள் மூடப்படும்.

குறிப்பாக அகர்தலா, அகமதாபாத், பேலாப்பூர், பெங்களூரு, புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, டேராடூன், காங்டாக், குவஹாத்தி, ஹைதராபாத், இம்பால், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொச்சி, கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புது தில்லி, பனாஜி, பாட்னா, ராஞ்சி, ஸ்ரீநகர், திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் வங்கிகள் மூடப்படும். ஆனால் மேகாலயா மற்றும் இமாச்சல பிரதேசத்தில் உள்ள வங்கிகளுக்கு மட்டும் இந்த நாளில் விடுமுறை அளிக்கப்படாது.

ஏப்ரல் 15 – புனித வெள்ளி/பெங்காலி புத்தாண்டு தினம் (நபபர்ஷா)/ஹிமாச்சல் நாள்/விஷு/போஹாக் பிஹுவை முன்னிட்டு ராஜஸ்தான், ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் தவிர மற்ற பகுதிகளில் வங்கிகள் மூடப்படும்

வங்கியில் வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு அதிர்ச்சி தகவல் – விரைவில் EMIக்கு அதிக வட்டி!

ஏப்ரல் 16 – போஹாக் பிஹு காரணமாக கவுகாத்தியில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்

ஏப்ரல் 17 – ஞாயிறு விடுமுறை

ஏப்ரல் 21 – கரியா பூஜை காரணமாக வங்கிகள் மூடப்படும்.

ஏப்ரல் 29 – ஷப்-இ-கத்ர்/ஜுமாத்-உல்-விடா காரணமாக வங்கிகள் மூடப்படும்.

ஏப்ரல் 23 – சனிக்கிழமை

ஏப்ரல் 24 – ஞாயிற்றுக்கிழமை

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!