சிறந்த மனிதநேய மருத்துவர் விருதை லட்சுமி, ஹேமா கையால் வாங்கிய பாரதி – மகிழ்ச்சியில் கண்ணம்மா!
பாரதி இதுவரைக்கும் பல அப்பாவி மக்களுக்கு இலவச மருத்துவம் கொடுத்திருக்கிறார். இதனால் பாரதியின் மனித நேயத்தை பாராட்டி சிறந்த மனிதநேய மருத்துவர் என்கிற விருது வழங்கப்படுகிறது. இந்த விருதை லட்சுமி மற்றும் ஹேமா கையால் வாங்கும் படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாரதி கண்ணம்மா:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. பாரதிக்கு எப்போது தான் அனைத்து உண்மைகளும் தெரியவந்து பாரதியும், கண்ணம்மாவும் ஒன்று சேருவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். பாரதி, கண்ணம்மாவை விட்டு எவ்வளவு தான் தூரமாக போக நினைத்தாலும் பாரதியும் கண்ணம்மாவும் அடிக்கடி சந்திக்கும்படியான சூழ்நிலை தான் அதிகமாக அமைந்து வருகிறது.
பாக்கியாவை மாட்டி விடும் கோபி, கைது செய்யும் போலீசார் – ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
பாரதிக்கு என்னதான் சந்தேக புத்தி அதிகமாக இருந்தாலும் பல அப்பாவி மக்களுக்கு இலவச மருத்துவம் கொடுத்திருக்கிறார். தற்போது மனிதநேய விருது வழங்கும் விழாவில் பாரதிக்கு தான் சிறந்த மனிதநேய மருத்துவர் என்கிற விருது வழங்கப்பட்டிருக்கிறது. மேலும், அந்த விருது வழங்கும் விழாவில் பாரதி அவரது மருத்துவ தொண்டு குறித்து பேசுகிறார். பின்பு, நான் இந்த விருதை எனது குழந்தைகளுக்கு சமர்பிக்கிறேன் என கூறி லட்சுமி மற்றும் ஹேமாவை மேடைக்கு அழைக்கிறார். லட்சுமியை அழைத்ததுமே கண்ணம்மாவிற்கு என்ன செய்வதென்று தெரியாமல் ஆனந்த கண்ணீர் வடிக்கிறார்.
தற்போது வரை பாரதி மனதார இருவரையுமே அவரது குழந்தையாக ஏற்றுக்கொண்டார். இது ஒரு புறம் இருக்க வெண்பாவின் அம்மாவான ஷர்மிளா அமெரிக்காவில் இருந்து வந்திருக்கிறார். பாரதியை திருமணம் செய்து கொள்ளவே ஒரு ஆண்டு டைம் கேட்டு இந்தியாவுக்கு வந்தாய். ஆனால், கிட்டதட்ட 9 ஆண்டுகள் ஆகியும் நீ அவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. இதனால் பாரதியை மறந்து இப்போதே என்னுடன் வா என கூறுகிறார். ஆனால், வெண்பா பாரதியை மட்டுமே திருமணம் செய்துகொள்வேன் என அடம்பிடிக்கிறார். இதற்கு பிறகு நான் உனக்கு வேறு திருமணம் செய்து வைத்தே தீருவேன் என ஷர்மிளா சபதம் போடும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.