பாக்கியாவை மாட்டி விடும் கோபி, கைது செய்யும் போலீசார் – ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் சமீபத்தில் மயூராவின் பிறந்த நாளுக்காக பாக்கியா, ராதிகாவுக்கு சமையல் ஆர்டர் செய்து கொடுக்க அதில் சில சிக்கல்கள் ஏற்பட்டு விஷயம் போலீஸ் ஸ்டேஷன் வரை செல்கிறது. இதனால் பாக்கியா போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்லப்படுவது போல ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
பாக்கியலட்சுமி ப்ரோமோ
எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பது போல விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் இந்த வார எபிசோடில் பல எதிர்பாராத சம்பவங்கள் நிகழ இருக்கிறது. அதாவது, கடந்த சில எபிசோடுகளில் ராதிகாவின் மகள் மயூராவுக்கு பிறந்த நாள் என்று சொல்லி ராதிகா, பாக்கியாவிடம் சமையல் ஆர்டர் கொடுக்கிறார். அந்த சமையல் ஆர்டரை டெலிவரி செய்யும் இடத்தில் கோபி மற்றும் பாக்கியாவை சந்திக்க வைக்க ராதிகா திட்டமிடுகிறார். இதனை அறிந்து கொண்ட கோபி வழக்கம் போல பாக்கியாவை அங்கு வர விடாமல் திசை திருப்பி விட, ஒரு பயங்கரமான சம்பவத்தை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் சற்று ஏமாந்து தான் போனார்கள்.
பரிகாரம் செய்துகொண்டிருந்த போதே மயங்கிய முல்லை – கதிருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
இதனை தொடர்ந்து ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் அடுத்த கட்ட கதைக்களத்தில், பாக்கியா கொண்டு வரும் உணவை உண்ணும் குழந்தைகள் உடல்நிலை சரியில்லாமல் போக அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த விஷயம் போலீஸ் ஸ்டேஷன் வரை செல்கிறது. அப்போது போலீசார், உணவு கொடுத்தவர்களை பற்றி விசாரிக்கும் போது இது தான் சரியான சந்தர்ப்பம் என எண்ணிய கோபி தாங்கள் ஒரு மெஸ்ஸில் உணவை ஆர்டர் செய்ததாக சொல்லி பாக்கியாவை இந்த பிரச்சனையில் மாட்டி விடுகிறார்.
இப்போது கோபியின் சதியால், இந்த பிரச்சனையில் சிக்கும் பாக்கியாவை ஸ்டேஷனுக்கு அழைத்து செல்ல போலீஸ்காரர்கள் வீட்டுக்கே வந்து விடுகின்றனர். வீட்டில் வைத்து பாக்கியாவை போலீஸ் அதிகாரி ஸ்டேஷனுக்கு அழைத்து வர சொன்னதாக கூறும் போலீசார், அவரை கையோடு இழுத்து கொண்டு செல்கின்றனர். இந்த சம்பவத்தை பார்த்தும் ஒன்றும் செய்ய முடியாமல் வீட்டில் உள்ள அனைவரும் பதறிப்போய் இருக்கின்றனர். இது போன்ற காட்சிகளுடன் பரபரப்பாக வெளியாகி இருக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலுக்கான ப்ரோமோ ஒன்று ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.